ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

திருடனை பிடிக்க பொறியாக நிறுத்தப்பட்ட சைக்கிளும் மாயம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் இரவு நேரங்களில் சைக்கிள் அடிக்கட திருடப்பட்டு வந்துள்ளது. இத்தகைய சம்பவம் தொடர்பாக யாரும் கைதாகவில்லை. இதுதொடர்பாக திருடர்களைப் பிடிக்க கீரமங்கலம் பகுதியில் இரவுக் காவலராக பணிபுரியும் செல்வநாயகம், இரவு நேரங்களில் கண்விழித்து சைக்கிளில் உலாவந்தபோதும் யாரும் சிக்கவில்லை.
  இதையடுத்து கீரமங்கலம் கடைவீதியில் அதாவது அடிக்கடி சைக்கிள் திருடப்படும் இடத்தில் ஒரு நகைக்கடையின் எதிரே அந்த கடை கேமரா முன்பாக சைக்கிளை நிறுத்திவிட்டு அதன்அருகே மறைந்திருந்துள்ளார்.
     கொட்டக் கொட்ட விழித்திருந்து பார்த்தபோது சைக்கிள் அருகே ஒருவர்கூட வரவில்லை. லேசாக இவருக்கு தூக்கம் அசத்தியுள்ளது. விழித்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் மாயமானது. சுற்றிலும் தேடியும் கிடைக்கவில்லை.
   இதையடுத்து அந்தக்கடையின் கேமராவில் பதிந்துள்ள காட்சிகளைப்  பார்த்தபோது சுமார் 4. 30 மணிக்கு தலையில் துணியால் முக்காடிட்ட நபர் ஒருவர் திருடியது தெரியவந்துள்ளது.  திருடனை பிடிக்க பொறியாக வைக்கப்பட்ட தன்னுடைய சைக்கிளும் திருடப்பட்டது குறித்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் செல்வநாயகம்.

இந்திய கடற்படை கப்பல் விபத்தை முன்கூட்டியே கணித்த தமிழ் பஞ்சாங்கம்

லாவண்யா பதிப்பகத்தின் சார்பில் 2013-14-ம் ஆண்டிற்கான விஜய வருடத்தில் பஞ்சாங்கம் ஆற்காடு கா.வே. சீதாராமய்யரால் கணித்து எழுதப்பட்டுள்ளது.
 இந்த தமிழ்ஆண்டு பஞ்சாங்கத்தில் ஆடி 29-ம் தேதி (14.08.2013)புதன்கிழமை அன்று பகல் நேரத்தில் கடலில் சரக்கு கப்பல்களில் சில பிரச்னை ஏற்பட்டு திடீர் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
   இவ்வாறு குறிப்பிட்டுள்ளபடி அதே நாளில் மும்பை கடற்படைத்தளத்தில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 18 வீரர்கள் உயிரிழந்தனர்.
   அதுமட்டுமின்றி வடநாடு பகுதியில் உள்ள காசி, கயா, அயோத்தி, போன்ற பகுதிகளில் யாத்ரீகர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி அங்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதிருப்பது குறிப்பிடத்தக்கது.
   முன்னொரு காலத்தில் அத்வாசிய பொருள்களில் ஒன்றாக இருந்தது. பஞ்சாங்கம். முன்னோர்கள் எதை செய்தாலும் பஞ்சாங்கத்தை பின்பற்றியே செய்தனர்.  நாளடைவில் அறிவியல் தொழில்நுட்பங்களை பின்பற்றத் தொடங்கியதால் இவற்றின் பயன்பாடு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இருப்பினும், சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டபடி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் பஞ்சாங்கத்தின் கணிப்பு மெய்ப்பிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாங்கம் பார்ப்போர் கூறுகின்றனர். இருப்பினும் இந்தக்குறிப்பு வேறு ஏதேனும் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

மாணவர்களின் கேள்விகளுக்கு நீதிபதி பதில்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஶ்ரீசுபபாரதி பாலிடெக்னிக் கல்லூரியில் நாளை(20.08.2013)மாலை 4 மணிக்கு வளாகத்தில் ஆலங்குடி நீதிமன்றம் சார்பில் சட்டம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சட்டம் தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களுக்கு ஆலங்குடி நீதிபதி கிருபாகரன்மதுரம் பதிலளிக்கிறார். இந்த நிகழ்ச்சி இதுவரை இல்லாத வகையில் புதுமையாக அமைக்கப்பட்டுள்ளது. இதுநீதிபதியின் யோசனையென ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். தொடர்புக்கு: 98652 77950 கே. செந்தில்ராஜா ஒருங்கிணைப்பாளர்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

விலையில்லா திட்டத்தை முடக்கும் செயலே நேரடிமானிடத்திட்டம்




ஆலங்குடி, ஆக. 10:
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் விலையில்லா திட்டத்தை முடக்கும் நடநடிக்கையே மத்தியஅரசின் நேரடிமானியத்திட்டமென்றார் ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப.கிருஷ்ணன்.
   ஆலங்குடி அருகேயுள்ள புதுக்கோட்டைவிடுதி ஊராட்சி மேலநெம்மக் கோட்டையில் புதிய பகுதி நேரஅங்காடியை திறந்து வைத்து மேலும் அவர் பேசியது
   நேரடி மானியத்திட்டத்தின் மூலம் கொடுக்கும் பணம் கிலோ அரிசிக்கு ரூ. 3 வீதம் 20 கிலோவுக்கும் ரூ. 60- ஐ மத்திய அரசு கொடுத்தால் அதைக்கொண்டு அரிசி வாங்கிவிடமுடியுமா?. இதேநிலைதான் இதர உணவுப்பொருள், எரிபொருளுக்குமாகும். இதெல்லாம் பிறமாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் தமிழகத்தில் செல்படுத்தப்படும் விலையில்லா திட்டங்களை முடக்கவே மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் ஏழைகளின் வறுமை ஒழியாது.   மேலும்,  இந்திய வீரர்கள் பாகிஸ்தானியர்களால் கொல்லப்பட்டது,  டாலர் மதிப்பு வீழ்ச்சி, விவசாயிகள் பாதிப்பில் அக்கறைகொள்ளாதது இவைகளெல்லாம் மத்திய அரசின் நிர்வாகத்திறமையின்மையின் அடையாளமாகும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.
       401 அட்டைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ரேஷன் கடை வாரம் தோறும் செவ்வாய் மற்றும் சனி ஆகிய இருநாள்கள் முழுநேரமும் செயல்படுமென தெரிவிக்கப்பட்டது.
  முன்னதாக மேலக்கோட்டையில் பகுதி நேர அங்காடி திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.சி. ராமையா, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் துரைதனசேகரன், ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ஏ.டி.மனமோகன், வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தலைவர் எம். ராஜேந்திரன், துணைத் தலைவர் ஆர். பரமசிவம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்சங்கத் தலைவர் கே.எஸ். சரவணன், மாவட்ட பால்வள சங்கத்தின் துணைத் தலைவர் எம்.எஸ். கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
   
                                                                             
       

வெள்ளி, 5 ஜூலை, 2013

ஈழத்தமிழர்களை பாராட்ட இசைந்துள்ளார் அதிமுக எம்எல்ஏ

 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் ஜூலை 6-ம் தேதி ஒரு விழா நடைபெறுகிறது. அந்த முகாம் மக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த விழாவில் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற தமிழகத்தில் உள்ள முகாம் மாணவர்கள் பாராட்டப்பட உள்ளனர். இவர்களை ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப. கிருஷ்ணன் (அதிமுக) பாராட்டுகிறார். மாணவர்கள் எந்த வழிக் கல்வியில் பயின்றார்கள் என்பது தெரியாது. அந்த கட்சியில் இவர் ஒருவர்தான் தமிழ் குறித்து அதிகம் பேசுவார்

சனி, 22 ஜூன், 2013

மாங்காடு சிவன்கோவில் கும்பாபிஷேம்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள மாங்காட்டில் பல நூறு ஆண்டுகளைக் கடந்த விடங்கேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கண்காணிப்பில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் ஆடி மாதம் முதல் தை மாதம் வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரான சிவலிங்கத்தின் மீது விழுந்து பிரதிபலிப்பதால் இக்கோவில் சிவபெருமானை சூரியன் பூஜித்த தலமாக விளங்குகிறது.
   மேலும், இக்கோவிலின் சிறப்புகளை ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் காடுகாண் காதை எனும் பகுதியில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரத்துக்கு முன்தோன்றிய இக்கோவிலில் கருவரை, மஹாமண்டபம், அம்மன், காலபைரவர், கணபதி, முருகன், நவகிரகம், துர்க்கை, சண்டிகேஸ்வரர், தெட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பரிவாக சவாமி என கோவிலின் அனைத்து பகுதிகளும் மக்களின் நன்கொடை மூலம் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.
 கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலையில் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்படட தீர்த்தங்களை குடங்களில் நிரப்பி ஜூன் 16-ம் தேதி காலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் பிரபாகர் தலைமையிலான  சிவாச்சாரியார்களால் தொடங்கின.
  தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பூஜைகள் செய்யப்பட்டது.  5- ஆம் கால பூஜை முடிவுற்றதும் செண்டை மேளஇசையில் யானை, குதிரைகள் முன்னே செல்ல, புனிதநீர்க்குடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கோவிலை சுற்றிவந்து கோபுரங்களை அடைந்தனர். பின்னர், தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை சொல்லிக்கொண்டே இருந்தனர். அப்போது, பல்வேறு திசைகளில் இருந்து கருடன்கள் வந்து வானில் வட்டமிட்டன. இதையடுத்து பக்தர்களின் கரஒலியுடன் கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டதுடன், தீர்த்தும் தெளிக்கப்பட்டது.
கூட்டத்தை ஒழுங்குபடுத்திய மாணவர்கள்:
 எல்.என்.புரம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கோவில் அருகே 3 இடங்களில் அன்னதானம் அளிக்கப்பட்டது. வடகாடு காவல் நிலைய போலீசார் மற்றும் ஆலங்குடி தீயணைப்பு பிரிவு போலீசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். பல்வறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர்,   பொதுமக்கள் செய்தனர். பாட்டுக்கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கிராம மக்கள் சார்பில் அனைவரையும் வரவேற்றனர்.


வெள்ளி, 21 ஜூன், 2013

சொன்னதுக்கு என்ன மரியாதை: ஆலங்குடி எம்எல்ஏ ஆவேசம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வாண்டாகோட்டை அருகே பால் வண்டியும், தனியார்பேருந்தும்( பிஎல்.ஏ) ஜூன் 19-ம் தேதி  மோதிக்கொண்டதில் கைக்குறிச்சி ஊராட்சி விஜயரகுநாதபுரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் படித்த 7 மாணவர்கள், பால் வண்டி ஓட்டுநர் உள்பட 8 பேர் சம்வஇடத்திலேயே பலியாயினர். இவர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நபருக்கு தலா ரூ. 1 லட்சத்தை ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப. கிருஷ்ணன், ஆட்சியர் செ. மனோகரன் உள்ளிட்டோர் ஜூன் 20 -ம் தேதி வழங்கினர்.
 அதன்பிறகு ஆட்சியரகத்தில் மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் விபத்தில்லாமல் பேருந்தை இயக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், அதிக பட்சம் 60 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும், அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லவேண்டுமென்ற அரசாணையை பின்பற்ற வேண்டும். இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
      கூட்டத்தை முடித்துவிட்டு ஆலங்குடி சட்டப்பேரவை  உறுப்பனர் கு.ப. கிருஷ்ணன் காரில் திருச்சிக்கு சென்றுகொண்டிருந்தார். மாத்தூர் அருகே சென்றபோது எதிரே திருச்சியிலிருந்து காரைக்குடி நோக்கி அதிவிரைவாக வந்த தனியார் பேருந்து (என். எல்.எல்) எம்.எல்.ஏ. வின் காரை இடித்து தள்ளுவதுபோல மின்னல்வேகத்தில் காரை நோக்கி வந்துள்ளது. சுதாரித்துக்கொண்ட காரின் ஓட்டுநர் கணம் நேரத்தில் சாலையை விட்டு காரை இறக்கினார். இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை.
     இதைத்தொடர்ந்து அங்கிருந்தபடியே மாவட்ட ஆட்சியரை செல்போனில் தொடர்புகொண்ட எம்எல்ஏ கு. ப. கிருஷ்ணன், அரசின் விதிமுறைகளை மீறி, நாம் கூட்டத்தின் வாயிலாக சொல்லியும் மதிக்காத தனியார் பேருந்து (என்என்எல்) மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதன்படி புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலரால் அந்த பேருந்து பறிமுதல் செய்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, ஓட்டிநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.    

செவ்வாய், 4 ஜூன், 2013

வடகாடு பகுதியில் மரங்கள் வளர்த்தும் மழை இல்லை: விவசாயிகள் அதிர்ச்சி :இயற்கை மாறுபாட்டை ஆய்வு செய்ய கோரிக்கை

  புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, கொத்தமங்கலம், அணவயல் உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு மூலம் விவசாயம் செய்யப்படுவதால் பல ஆண்டுகளாக மரங்கள் வளர்க்கப்படுகிறது. இதன்தாக்கம் இப்பகுதியில் மா, தென்னை, பலா மரங்கள் தோப்புகளாக பராமரிக்கப்படுகின்றன. இப்பகுதியில் பலா மரங்கள் அதிகமாக இருப்பதன் விளைவே தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், வேம்பு, தேக்கு, பூவரசு, ரோஸ்வுட் உள்ளிட்ட மரங்களும் வளர்க்கப்படுகின்றன. நூற்றுக்கணக்கான ஏக்கரில் மரம் வளர்க்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு வருடமும் மழை அதிகமாகவே பெய்துள்ளது. மரம் அதிகரிப்பதால் மரச்சந்தையும், மரம் வியாபாரிகளும் அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் அனேக இடங்களில் கோடை மழை பெய்தது. இந்த மழை ஈரத்தை பயன்படுத்தி அடுத்த சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகின்றனர். ஆனால், மரம் நட்டால் மழை பெய்யும் என்பார்கள், இந்தப் பகுதியில் வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கப்படுகிறது. மேலும், மரங்களை வளர்த்து வனங்களாக மாற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்பகுதிக்கு மழைபெய்யாமல் மரம் குறைவாக உள்ள பகுதிக்கும், மரங்கள் இல்லாமல் கட்டிடங்கள் மட்டுமே அதிகமாக உள்ள நகர் பகுதிக்கும் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த நிலை நீடித்தால் குடிக்கூட தண்ணீருக்கே பஞ்சம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
 இது குறித்து விவசாயி மாங்காடு வினோத் கூறியது.
 மரங்கள் அதிகமாக வளர்க்கப்படுவதால் கோடையின் தாக்கம் மற்ற பகுதிகளைவிட குறைவாகவே இருக்கும். அதற்கு சான்றாகவே மலை பிரதேசங்களில் பயிரிடப்படும் மிளகு இங்குள்ள தோப்புகளில் உள்ள மரறங்களில் கொடியாக ஏற்றி வளர்க்கப்படுகிறது. குளிர் பிரதேசங்களைப்போலே இங்கு மிளகு நல்ல விளைச்சலை ஈட்டுகிறது. அப்படி இருக்க கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் குறைந்துவிட்டது. அதேபோல, இந்த ஆண்டு கோடைமழை முற்றாக இல்லாதிருப்பது எதிர்காலத்தில் குடிநீர் கிடைக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகையால்,  பருவநிலை மாற்றம் ஏற்பட்டிருக்கலாமென அச்சம் ஏற்பட்டுள்ளதால் இது குறித்து அரசு விஞ்ஞானிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.  இயற்கை இடற்பாடுகளில் இருந்து போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுவே இப்பகுயினரின் கோரிக்கையாக உள்ளது.

வடகாடு பகுதியில் மரங்கள் வளர்த்தும் மழை இல்லை விவசாயிகள் அதிர்ச்சி இயற்கை மாறுபாட்டை ஆய்வு செய்ய கோரிக்கை

  புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, கொத்தமங்கலம், அணவயல் உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு மூலம் விவசாயம் செய்யப்படுவதால் பல ஆண்டுகளாக மரங்கள் வளர்க்கப்படுகிறது. இதன்தாக்கம் இப்பகுதியில் மா, தென்னை, பலா மரங்கள் தோப்புகளாக பராமரிக்கப்படுகின்றன. இப்பகுதியில் பலா மரங்கள் அதிகமாக இருப்பதன் விளைவே தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், வேம்பு, தேக்கு, பூவரசு, ரோஸ்வுட் உள்ளிட்ட மரங்களும் வளர்க்கப்படுகின்றன. நூற்றுக்கணக்கான ஏக்கரில் மரம் வளர்க்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு வருடமும் மழை அதிகமாகவே பெய்துள்ளது. மரம் அதிகரிப்பதால் மரச்சந்தையும், மரம் வியாபாரிகளும் அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் அனேக இடங்களில் கோடை மழை பெய்தது. இந்த மழை ஈரத்தை பயன்படுத்தி அடுத்த சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகின்றனர். ஆனால், மரம் நட்டால் மழை பெய்யும் என்பார்கள், இந்தப் பகுதியில் வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கப்படுகிறது. மேலும், மரங்களை வளர்த்து வனங்களாக மாற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்பகுதிக்கு மழைபெய்யாமல் மரம் குறைவாக உள்ள பகுதிக்கும், மரங்கள் இல்லாமல் கட்டிடங்கள் மட்டுமே அதிகமாக உள்ள நகர் பகுதிக்கும் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த நிலை நீடித்தால் குடிக்கூட தண்ணீருக்கே பஞ்சம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
 இது குறித்து விவசாயி மாங்காடு வினோத் கூறியது.
 மரங்கள் அதிகமாக வளர்க்கப்படுவதால் கோடையின் தாக்கம் மற்ற பகுதிகளைவிட குறைவாகவே இருக்கும். அதற்கு சான்றாகவே மலை பிரதேசங்களில் பயிரிடப்படும் மிளகு இங்குள்ள தோப்புகளில் உள்ள மரறங்களில் கொடியாக ஏற்றி வளர்க்கப்படுகிறது. குளிர் பிரதேசங்களைப்போலே இங்கு மிளகு நல்ல விளைச்சலை ஈட்டுகிறது. அப்படி இருக்க கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் குறைந்துவிட்டது. அதேபோல, இந்த ஆண்டு கோடைமழை முற்றாக இல்லாதிருப்பது எதிர்காலத்தில் குடிநீர் கிடைக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகையால்,  பருவநிலை மாற்றம் ஏற்பட்டிருக்கலாமென அச்சம் ஏற்பட்டுள்ளதால் இது குறித்து அரசு விஞ்ஞானிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.  இயற்கை இடற்பாடுகளில் இருந்து போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுவே இப்பகுயினரின் கோரிக்கையாக உள்ளது.

வியாழன், 30 மே, 2013

மருத்துவமனையில் மரம்தங்கசாமி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மரம்தங்கசாமி. இவர் யாரும் செய்திடாத வகையில் தனது சொந்த நிலத்தில் நட்ட கன்றுகள் தற்போது வனமாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக மரம் வளர்க்க வலியுறுத்தி தமிழகமெங்கும் பிரசாரம் மேற்கொண்டார்.  இவரது விழிப்புணர்வும் இம்மாவட்டத்தில் மரம் அதிகம் வளர்க்கப்படுவதற்கு ஒரு காரணமாகும். இப்பெருமைகளுக்கு சொந்தக்காரரான மரம்தங்கசாமி தற்போது உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆறுதல் கூறுங்கள். 9786604177

ஞாயிறு, 19 மே, 2013

மாங்காடு சிவன் கோயில் குடமுழுக்கு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வடகாடு அருகேயுள்ள மாங்காடு அருள்மிகு வர்த்தனாம்பிகை உடனுறை விடங்கேஸ்வரர் திருக்கோயில் ஜூன் 21-ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. தொடர்புக்கு: 94438 96860

வெளியில் தமிழையும், வீட்டில் வேறு மொழியையும் பேசுபவர் தமிழரல்லர்


 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் மே18 (இரவு)இலங்கையில் முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்தோருக்கு நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஆலங்குடி எம்எல்ஏ குப கிருஷ்ணன் பேசியது.

  தமிழினம் 64 நாடுகளில் வாழும் தேசிய இனம்.  ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பேசப்பட்ட மொழிகலெல்லாம் இன்று அதற்கான சுவடே இல்லாமல் அழிந்துவிட்டது. ஆனால், பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு கொண்டுள்ள தமிழ்மொழியை எவராலும் அழிக்க முடியாது. அதை அழிக்க முற்படுவோர் வீழ்த்தப்படுவர். மொழி தலைத்தோங்க உலகத் தமிழரெல்லாம் ஒன்றுபட வேண்டும் இதுபோன்ற நிகளழ்ச்சிகளை முன்னெடுத்துச்செல்ல வேண்டும். வீட்டுக்குள் வேறு மொழியையும், வெளியில் தமிழ்மொழியையும் பேசுவோரெல்லாம் தமிழரல்லர் என்றார்.
    கடலூரில் நாம் தமிழர் கட்சி கூட்டத்துக்கு அரசு தடைவிதித்துள்ள நிலையில், கொத்தமங்கலத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் மறைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் ஆகையால் அவரது படம் வைக்க தடை செய்ப்பட்டது. ஒலி பெருக்கி பயன்படுத்தவும் கீரமங்கலம் போலீஸாரால்  தடைவிதிக்கப்பட்டிருந்தது.  இருப்பினும் அதையும் மீறி பிரபாகரன் மகன் படம், ஒலிபெருக்கியுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.

சனி, 11 மே, 2013

ஊருக்கொரு பேச்சு.. தனக்கொரு பேச்சு...






புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு தொடக்க வேளாண் கடன் சங்கத்தில் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஆனாலும் அதுல பதவி ஆசை விடல பாருங்க.. ஊர் சொல்லையும் மீறி எத்தனை லட்சத்தைக் கொடுத்தாவது பதவியை பிடிக்கனும் என்ற ஆசையில சண்டை போட்டுக்கொண்டோரை ஒதுக்கிவிடும் போலீசார்.

                                                                             
     

ஒரு வழியாக அம்மன் திருவிழா முடிவுக்கு வந்தது


புதுக்கோட்டை மாவட்டம் மாங்காட்டில் பல ஆண்டுகளாக முத்துமாரியம்மன் கோவில் என்று அழைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலின் தென்கிழக்கில் வெட்டப்பட்ட புதிய குளத்தில் இருந்து தண்ணீர் ஊறியது. இதனால் நீரூற்று முத்துமாரியம்மன் கோவில் என்று பகுதிபேரால் அழைக்கப்பட்டது.   அவரவர் அழைத்துக்கொள்வதோடு நிறுத்திகொண்டால்தான் பிரச்னையே இல்லையே. இதை ஒரு ஆயுதமாக வைத்துக்கொண்டு வேரு பிரச்னைகளோடு ஒப்பிட்டு கோஷ்ட்டிகளை உருவாக்கிக்கொண்டதால் பல்வேறு பிரச்னைகளும் நடந்தது.  சிறு சிறு சிக்கல்களுக்கும் இடையே நல்லபடியாக திருவிழா நடைபெற்றது. மக்களும், போலீசும் நிம்மதியானார்கள்.
மக்களோடு மகமாயி...

திங்கள், 6 மே, 2013

இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மே 3-ம் தேதி நடைபெற்ற பத்திரிகை சுதந்திர தின விழாவில் கவிஞர் தங்கம்மூர்த்தி பேசியது.
பாமரனின் பள்ளிக்கூடம்   தேநீர்கடையாகவும், அங்கு பணிபுரியும்
ஆசிரியர்களாக பத்திரிகைகள் திகழ்கின்றன. ஆகையால்,  மக்களின் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கவும், கருத்துக்களை மக்களிடம் கொண்டுசெல்லவும், குறைகளை அச்சமின்றி வெளியிட வேண்டுமென்றால் பத்திரிகைகளின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் குக்கிராமத்தில் முன்மாதிரியாவுள்ள மாங்குடி அரசுப் பள்ளியை வெளி உலகம் அறிந்ததும். அதேபோல, ஊழல்கள் மக்களுக்கு தெரிந்ததும் பத்திரிகை சுதந்திரத்தின் வெளிப்பாடாகும்.
   இருப்பினும்,  மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் பாதுகாப்பாக இருக்கிறது என்றாலும் மற்ற நாடுகளோடு  ஒப்பிடும்போது பின்னடைவாகத்தான் உள்ளது.
  இதுதொடர்பாக 179 நாடுகளைக்கொண்டு சர்வதேச அமைப்பின் கணக்கெடுப்புப்படி பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடத்தில் உள்ளது. இந்தியா 140 வது இடத்திலும், சீனா 174-வது இடத்திலும் உள்ளது.
  இந்தியாவில் காஷ்மீர், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட தாக்குதல்களினால் இந்தியா தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
   தனிமனித சிந்தனை நாட்டுக்கு முக்கியம், இருப்பினும் செய்தியாளர்கள் தான் கொண்டிருப்பதில் நல்லவற்றையே வெளிக்கொணர வேண்டும். இதுபோன்ற விழாக்களை மக்கள் விழாக்களாக மாற்ற வேண்டுமென்றார்.
   விழாவுக்கு த.மு.எ.க.ச மாவட்டச் செயலர் ரமா.ராமநாதன் தலைமை வகித்தார்.
  எழுத்தாளர் குயிலிமுனுசாமி, கவிஞர் பாலா, வட்டாட்சியர் கோவிந்தராஜ், பேரூராட்சித் தலைவர் ஏ.டி.மனமோகன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
  விழாவுக்கான ஏற்பாடுகளை மக்கள் நீதிமன்ற பிரதிநிதி கே. செந்தில்ராஜா மற்றும் செய்தியாளர்கள் செய்தனர்.

வியாழன், 2 மே, 2013

மிரட்டும் வெயிலுக்கு தற்காப்பு



நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோடை வெயிலில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்த 2 பேர் சொந்த வீட்டுக்குள்ளே போனாங்க.. அங்கெ, குளிரூட்டும் கருவிகளை இயக்க மின்சாரம் இல்லை, மரத்தடிக்கு போனாங்க மரத்துல இலை இல்லை, குடத்தைப் பார்த்தாங்க தண்ணீர் இல்லை வேறு என்ன செய்ய முடியும்...
 இதுமாதிரி சட்டையை கழற்றிவிட்டு இப்புடி சேர் கிடைச்சா இருக்க வேண்டியதுதான், பெஞ்ச் கிடைச்சா கொஞ்சம் சாய வேண்டியதுதான்.



செவ்வாய், 30 ஏப்ரல், 2013

பத்திரிகை சுதந்திர தினம்




புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மே 3-ம் தேதி மாலை 5 மணிக்கு ஆலங்குடி செய்தியாளர்கள் சார்பில் பத்திரிகை சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது.
  இதில் செய்தியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்துகொண்டு பேச உள்ளனர். தவறாது கலந்துகொள்ளவும்.  9976368591
 

சனி, 27 ஏப்ரல், 2013

விலையில்லா பொருள்களை வாங்க மறுத்த மக்கள்

 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் கோவிலூர் மற்றும் எல்என்புரம்(அணவயல்) ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும் சில பகுதியினருக்கு 26.03.2013 அன்று அரசின் விலையில்லா பொருள்களான மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவைகளை அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் குப கிருஷ்ணன் தலைமையில் வழங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் வழங்க வேண்டுமென விடுபட்டோர் வலியுறுத்தியதால் இரண்டு இடங்களிலும் விழா ரத்து செய்யப்பட்டது.
 இதன் பின்னணி, கடந்த ஆட்சியில் இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய உருளை பெரும்பாலான கிராமங்களில் வழங்கவில்லை. அதைப்போலவே தற்போதும் சிலருக்கு கொடுத்துவிட்டு எல்லோருக்கும் வழங்கியாச்சுன்னு அறிவிச்சுடுவாங்கன்னு மக்கள் அச்சப்படுறாங்க. இதுவும் நியாயம்தானே... ஓட்டு கேட்கும்போது மட்டும் கட்சிக்காரங்க கையில இருந்த பட்டியல் இப்ப எங்கபோச்சு... இப்ப மட்டும் எதா இருந்தாலும் அதிகாரிகளிடம் கேளுங்கண்ணு சொல்லுவது நியாயமா?  என அந்தவிழாவில் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளை பொதுமக்கள் வழிமறித்து கேட்டாங்க..... இதுக்கு யார் பதில் சொல்றது..........
 எல்லோரும் ஓடியே போய்ட்டாங்க..






வெள்ளி, 22 மார்ச், 2013

பிளாஸ்ட்டிக் சூழலை கெடுக்கும்



  புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கடைவீதியில் சூழலைக்காக்க தான் நடத்தும் தேநீர் கடையில் பிளாஸ்ட்டிக் பையில் தேநீர் கொடுக்கமுடியாதென துண்டறிக்கை மூலம் தெரிவித்துள்ளார் அக்கடையின் உரிமையாளர். அனைவரும் பிளாஸ்ட்டிக் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளலாமே...      

மாடுகளை தெருவுக்கு ஓட்டிவந்து கூவி, கூவி விற்கும் விவசாயிகள்


குறைந்தளவான பருவ மழை, தொடர்மின்தடை,
இவற்றல் நெல், கடலை உள்ளிட்ட பயிர் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் உணவுப்பற்றாக்குறையோடு வைக்கோல் தட்டுப்பாடு, தீவனங்கள் கடும் விலை உயர்வினால் கால்நடை வளர்ப்பும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
   சம்பா சாகுபடியில் அறுவடை செய்யப்பட்டு வயலில் விடப்பட்ட வைக்கோலையும் அதிக விலை கொடுத்து கேரள வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
   இதன்தாக்கம் சந்தைகளில் மாடுகளை குறைந்த விலைக்கு அடிமாடுக்கே விற்பனை செய்ய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
   இதனால், உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து லாரிகளில் ஏற்றிவரப்பட்ட பலவிதான மாடுகளை கிராம பகுதிகளுக்குள் கையில் பிடித்துக் கொண்டு மாடு வேண்டுமா என விவசாயிகள் தாங்கள் வளர்த்த மாடுகளை கூவி, கூவி விற்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
   

வைகோவை மதித்து குடிப்பழக்கத்தை நிறுத்திய விவசாயி


 புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி மல்லிகைபுஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் மு. ரெங்கசாமி (வயது 53). ம.தி.மு.க. வின் மேலவை பிரதிநிதியான இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.
   இவருக்கு திருமணத்துக்கும் முன்பு இருந்தே மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. தற்போது மதுவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வரும் ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வை.கோ-வின் கோரிக்கையை ஏற்ற ரெங்கசாமி கடந்த 4 மாதங்களாக குடி பழக்கத்தை நிறுத்தியுள்ளார். அதற்காக வடகாட்டில் பாராட்டுவிழா நடைபெற்றது.
  பாராட்டுவிழாவுக்கு வடகாடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாத்தையா தலைமை தாங்கினார்.   ஊராட்சிமன்ற உறுப்பினர் அன்பழகன், ஏ.வி. பேரவை நிர்வாகிகள் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   இதுகுறித்து குடியை நிறுத்திய ரெங்கசாமி பேசியது.
நான் ம.தி.மு.க.கட்சியின் பொறுப்பாளராக இருந்தாலும் தொடர்ந்து விவசாயம் தொடர்பான கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் தொகையை தனது செலவுக்காவே பயன்படுத்தினேன்.  30 வயத்தில் தொடங்கிய இந்த குடிப் பழக்கம் 23 ஆண்டுகள் நீடித்தன.
கரூரில் கட்சி சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டுக்கு சென்றபோது அங்கு மதுவுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தப்போவதாக கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்தார். அதேபோல, தெருத் தெருவாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது வேண்டுகோள்படியே மதுகுடிப்பதனால்தான் விபத்து, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களும் அதிகமாக நடக்கின்றன. மதுக்கடைகளை பூட்டுவது அரசின் கொள்கை.  ஆனால், வை.கோ.வின் கொள்கையை ஏற்று நாம் குடிக்காமல் இருந்தால் அரசு தனது கொள்கையை மாற்றிக்கொள்ளும் என்பதால் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து மதுவை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டேன். அதன்பிறகு மருத்துவரிடம் பரிசோதனைக்காக சென்றபோது இதற்கு மேலும் குடித்திருந்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவர் கூறினார். மதுவை நிறுத்தியதால் கடந்த 4 மாதங்களாக மனநிம்மதியாக இருக்கிறேன். என்னிடமும் பணம் இருக்கிறது. திருமணத்துக்கு முன்பிருந்தே குடித்தேன் அதனால் எனது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு எனக்கு ஏற்பட்ட மனஅழுத்தம்தான் நான்போதைக்கே அடிமையாகிவிட்டேன். தற்போது மனஉறுதியுடன் மதுவை கைவிட்டேன். நிம்மதியாக இருக்கிறேன்.  ஆகையால், உரிய உளவியல் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று தன்னம்பிக்கையுடன் இருந்தால் மதுகுடிக்கும் எண்ணமும் வராது, நம்மையும் இச்சமுதாயம் மனிதனாக மதிக்கும் இவ்வாறு பேசினார்.
   பாராட்டுவிழாவில் ஏ.வி. பேரவை நிர்வாகிகள் ராஜேஸ், பிரபாகரன், கோபு, செந்தமிழ்ச்செல்வன், பத்மநாதன், வடிவேல், சுப்பிரமணியன், கப்பல்சிவா மற்றும் பலர் கலந்துகொண்டு ரெங்கசாமியை வாழ்த்திப்பேசினர்.

சனி, 16 மார்ச், 2013

நிறைவேறும் நம்மாள்வார் கோரிக்கை



 சிறுதானியங்களை பாதுகாக்க வேண்டும், இயற்கை விவசாயம் மேற்கொள்ள வேண்டுமென்பது அய்யா இயற்கை விஞ்ஞானி நம்மாள்வாரின் பிரதான கோரிக்கை. இந்த நியாயமான கோரிக்கையை அவர் பல்வேறு வகையில் மக்களிடமும், ஆட்சியாளர்களிடமும் எடுத்துகூறி வருகிறார்.  ஆரம்பத்தில் இதற்கு அரசு செவி சாய்க்கவில்லை. நிலைமையை உணர்ந்த அதிகாரிகள் தற்போது, விவசாயிகள் வைத்திருக்கும் பாரம்பரிய தானியங்களை அந்தந்த பகுதியிலுள்ள வேளாண் ஆராய்ச்சியாளர்களிடம் கொடுத்து காப்புரிமை பெற்றுக்கொள்ளுங்கள் என வேளாண் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இப்பணியை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முன்னெடுத்துள்ளது.
  தமிழ்நாடுக்கு சொந்தமான வேம்பு மரம் அமெரிக்கா காப்புரிமை பெற்றபோதுதான் உணர்ந்துள்ளார்கள் நம்பஆட்கள். இதையாவது முழுசா நிறைவேற்றட்டும். அய்யாவின் கோரிக்கை நிறைவேறட்டும்.


அரசு நிதியை வீணடிக்கும் அதிகாரிகள்


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அற்புதமாதா நடுநிலைப்பள்ளியில் தமிழகமுதமைச்சரின் சிறப்பு பொது மருத்துவமுகாம் 16.03.2013-ல் நடைபெற்றது. ஏழை, எளியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இம்முகாம் குறித்து தகவல் தெரிவித்தால் மட்டுமே உரியவர் வந்து பயனடைவர். மாறாக, ஆலங்குடியில் நடைபெற்ற மருத்துவமுகாமானது அவ்வழியாக சென்றோருக்குத்தான் தெரியும். ஒலிபெருக்கி, துண்டறிக்கை, சுவரொட்டி இவைகள் மூலம் கட்டணம் செலுத்தியோ அல்லது செய்தித்தாள்கள் மூலம் இலவசமாகவோ தெரிவிக்கவில்லை. இதன் விளைவு மக்கள் அங்கு வரவில்லை. மருத்துவ பணியாளர்கள் அங்குமிங்கு குழுமி ஓய்வெடுத்தனர். அரசின் உன்னத திட்டம் இப்படியா வீணடிக்கவேண்டும். கணக்கெழுதியே பழகிய சில சுகாதாரத்துறை அதிகாரிகள்தானே இதற்கு காரணம். இம்முகாம் முடிவுக்கு கொண்டுவரும் என எதிர்பார்ப்போம்.....
வெறிச்சோடிய முகாம் நடைபெற்ற பள்ளி வளாகம்,


 மக்களுக்கு விளக்கம் அளிக்க அமைக்கப்பட்ட அரங்கு



பன்னிரண்டு வயதுப் பாலகனைச் சுட்டஅந்தப் பாவிகளை விட்டு விட்டோம். - சேந்தன்குடி கவிஞர்.க.புத்திரசிகாமணி,


வென்றததைப்… பகைவனை வீழ்த்திய வரலாற்றை,
வீரத்தைத் தொலைத்து விட்டோம்.
வீட்டுக்கொரு டி.வியும் ஆளுக்கொரு செல்லுமாய்
விவேகத்தைப் புதைத்து விட்டோம்.

என்றிதைச் சொன்னாலும் ஏறாது. சேற்றுக்குள்
எறுமைபோல் அமிழ்ந்து விட்டோம்.
எதிரிகளின் கொடுமைகள் இதற்குமேல் பொறுக்காது
எல்லையைக் கடந்து விட்டோம்.

பன்னிரண்டு வயதுப் பாலகனைச் சுட்டஅந்தப்
பாவிகளை விட்டு விட்டோம்.
படங்களைப் பார்த்தே பதறிப்போய் பகைவர்களைப்
பலிவாங்க கிளம்பி விட்டோம்.

ஒன்றரை லட்சம்பேர் உயிரினைக் குடித்துத்… தமிழா்கள்
ஒருமிக்க அழித்த... அந்த
“ஒருத்தனை” உலகத்தில் உலவிட விடமாட்டோம்
உயிரோடு விடவே மாட்டோம்.

…………………………………………………


வெள்ளி, 15 மார்ச், 2013

காங்க. திமுவை நெருக்கடிக்குள்ளாக்கும் அதிமுக எம்எல்ஏ


புதுக்கோட்டைமாவட்டத்தில் ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் குப கிருஷ்ணன் வைத்துள்ள பதாகையானது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்டியை ஏற்படுத்தியுள்ளது.
      ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டுள்ள ஐ.நா. வின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி டெசோ அமைப்பின் சார்பில் திமுக, விடுதலைச்சிறுத்தை கட்சியினர் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை(12.03.2013) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   இந்நிலையில் ஆலங்குடியில் அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் (அதிமுக) குப கிருஷ்ணன், அதிமுக நிர்வாகிகள் டி.எல். ரத்தினம், நெவளிநாதன் ஆகியோர் சார்பில் திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களையின் உறுப்பினர்கள் இலங்கை அதிபருக்கு மரியாதை செலுத்துவது, அவரிடம் இருந்து பரிசு பெறுவது போன்ற படத்துடன்கூடிய பதாகை வைக்கப்பட்டது.
  இப்பதாகை தங்கள் கட்சியை இழிவுபடுத்துவதாக கருதிய திமுகவினர், பதாகையை அகற்ற வேண்டுமென காவல்துறை அலுவலர்கள், ஆலங்குடி வட்டாட்சியர் ஸ்டாலினுக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து அங்கிருந்த பதாகை அகற்றப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அதிமுகவினர் இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், மீண்டும் அதே இடத்தில் அதே பதாகையை வைத்தனர். இதனால் அதிமுக, திமுகவினரிடையே மறைமுகமாக தாக்குதல் ஏற்பட்டது.
   இந்நிலையில் மத்திய அரசை ஆதரித்துவரும் கருணாநிதி தமிழகத்தில் முதலமைச்சராக இருந்தபோது இலங்கையில் லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர், அதற்கு காரணமான அந்நாட்டு அதிபர் வருகையின்போது இந்தியாவில் உற்சாக வரவேற்பு, சென்னைக்கு சிகிச்சைக்காக வந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பியது, டக்ளஸ் தேவானந்தாவை கைதுசெய்யாதது என ஈழத்தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டுவிட்டு தற்போது போராட்டம் நடத்துவது தமிழர்களுக்கு செய்யும் துரோகமாகும். இதையே இந்த பதாகை உணர்த்துகிறது என்றார் குப கிருஷ்ணன்.
   புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வடகாடு, கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வைகோ, பழ.நெடுமாறன், சீமான், பாவாணன், குளத்தூர்மணியன், காசிஆனந்தன், மணியரசன் மற்றும் திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரால் பலமுறை ஈழஆதரவாக பலமுறை பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருப்பது    இப்பகுதியினரின் தமிழ்உணர்வை பறைசாற்றுகிறது.
  மேலும், மத்திய நிதிஅமைச்சரின் தொகுதிக்குள்பட்ட ஆலங்குடி தொகுதியில் தற்போது சட்டப்பேரவை உறுப்பினரே ஈழத்தமிழர் உணர்வாளர்களுக்கு ஆதரவாக பேசிவருவதும், இதுபோன்று பதாகை வைத்திருப்பதும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
     

புதன், 13 மார்ச், 2013

காஷ்மீரோடு ஈழப்பிரச்னையை ஒப்பிடக்கூடாது


 
புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடியில் இங்குள்ள தமிழருக்கும், ஈழபெண்ணுக்கும் புதன்கிழமை நடைபெற்ற திருமணவிழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசியது.
   உயிருக்கு இணையானதாக கருதக்கூடிய தமிழ்மொழி, இனம் உள்ளிட்ட பிரச்னையிலிருந்து மத்திய அரசு நலுவ முயல்வது தவறானது.தேசிய மொழி, இனத்தை காக்கும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது என்பதை அவர்கள் உணரவேண்டும்.
    இன்று இலங்கை சிக்கலுக்கு உதவினால் நாளை காஷ்மீர் சிக்கலுக்கும் அந்நிய நாடுகள் நம்மை நிர்பந்திக்குமென கருதி அதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஈழப்பிரச்னையோடு காஷ்மீர் பிரச்னையை மத்திய அரசு ஒப்பிடகூடாது.
   காஷ்மீரில் குண்டுவீச்சு, பாலியல் தொல்லை, வன்முறை இவைகளெல்லாம் இல்லை, அதேபோல, அங்கிருந்து அகதிகளாக யாரும் வெளியேறவில்லை. மேலும்,அங்குள்ளவர் இந்திய அரசுக்கு உயர்பதிவிக்கெல்லாம் வரலாம். ஆனால், இதற்கு மாறாகவே தமிழ்ஈழத்தில் நிகழ்ந்துள்ளது. தமிழ்ஈழத்தில் உள்ள ஒருவரை அதிபராக, பாதுகாப்பு அதிகாரியாக இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளுமா என்பதை உணரவேண்டும்.
     அதேபோல,  இலங்கைக்கு நாம் உதவாவிட்டால் சீனா உதவும் என்று கூறுவதும் தவறானது. இலங்கை தமிழர்கள் அண்டை நாடுகளில், உரிமையுள்ள நாடான இந்தியாவும், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளால் காப்பாற்றப்படவில்லை. ஆகையால்தான், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் போராட வேண்டியிருந்தது. மேலும் தமிழ்ஈழத்தில் போர் நடக்கும் என்றார் காசிஆனந்தன். இவ்விழாவில் பழ.நெடுமாறன், தமிழ்சேதிய பொதுஉடைமைக் கட்சித் தலைவர் பெ. மணியரசன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
 



ஞாயிறு, 10 மார்ச், 2013

கல்வியில் மாற்றம் காலத்தின் கட்டாயம்




 புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூர் ஆறுமுகம் மெட்ரிக் பள்ளியில் 7.3.2013-ல் நடைபெற்ற ஆண்டுவிழாவில் மாணவர்களைப் பாராட்டி  சமூகஆர்வளர், வழக்குரைஞர் எஸ்.பி. ராஜா. பேசியது.
  கல்விதான் நாட்டை வலிமைப்படுத்துமென கல்விக்காக மத்திய, மாநில அரசுகள் ஏராளமாய் நிதி ஒதுக்குகிறது. அதேசயம், மாணவர்கள் உயிரைமாய்த்துக் கொள்ளுதல், சமூகவிரோத செயலில் ஈடுபடுதல், பாலியல், திராவகம் வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் எல்லாம் கல்வியானது சமூகத்துக்கு பயனளிக்கும் வகையில் இல்லை என்பதை அடையாளப்படுத்துவதாக கருதப்படுகிறது.
   இதையெல்லம் இப்படியே விட்டுவிட்டால் எதிர்காலத்தில் சமூகசீரழிவுகள் இதைவிட அதிகமாகும். இப்போதைய பிரச்னைகளால் பிள்ளைகளை வளர்க்க பெற்றோர்கள் கவலைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், கல்வியை கற்றுக்கொடுத்துவிட்டால் சமூகம் ஒழுக்கமாக இருக்கும் என்பதை நிலைநாட்டும் வகையில் சமூகத்தோடு தொடர்பை ஏற்படுத்தும் வகையில் கல்வியில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்றார்.
 
 
                                                                             
       

வெள்ளி, 8 மார்ச், 2013

மதுவுக்கு எதிரான பிரசாரத்துக்கு பெண்களே பொருத்தமானவர்கள்.



புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் 8.3.2013 அன்று நடைபெற்ற மகளிர் தினவிழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல முதன்மை மேலாளர் பாலச்சந்தர் பேசியது.
   அடுத்தடுத்த தலைமுறைக்கு தீங்கிழைக்கும்  பிளாஸ்ட்டிக் பொருளின் பயன்பாட்டை முழுமையாக தானும் நிறுத்திக் கொண்டு இதை மற்றவர்களிடமும் எடுத்துக்கூற வேண்டும். அதேபோல,  சமூகத்தை சீரழிக்கும் மதுவுக்கு எதிராக பெண்கள் பிரசாரத்தில் ஈடுபடவேண்டும் அதுதான் சரியான தீர்வை ஏற்படுத்தும் என்றார்.

கோடை மழையும்,பயறு சாகுபடியும்

  புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் க. வைரவன்   வெளியிட்ட செய்திக்குறிப்பு:
   இலங்கை அருகே ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.   கோடையில் பெய்யும் இம்மழையை பயன்படுத்தி நெல் அறுவடை செய்யப்பட்ட நிலம் உள்ளிட்ட விளை நிலங்களை நன்கு உழவு செய்ய வேண்டும்.  
    நீர்பாசன வசதி மற்றும் வறட்சியான நிலங்களில் உளுந்தையும், முழுவதும் மானாவாரியாக பயிர் செய்யக் கூடிய நிலங்களில் எள்ளையும் தேர்ந்துதெடுத்து விதைக்கலாம்.
  உளுந்து சாகுபடி:
       உளுந்தைப் பொறுத்தவரையில் மானாவாரி மற்றும் இறவையில் வம்பன் 4, வம்பன் 5, வம்பன் 6 ரகத்தையும், நெல் அறுவடை செய்யப்பட்ட தரிசில் ஏ.டி.டி 3, வம்பன் 4, வம்பன் 5 மற்றும் வம்பன் 6 ரகங்களை விதைக்கலாம். 
    தேவையான உளுந்து விதை:  உழுந்தை தனிப்பயிராக பயிரிட ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதையும் ஊடுபயிராக பயிரிட 4 கிலோ விதையும் மற்றும் நெல் தரிசில் பயிரிட 10 கிலோ விதையும் தேவைப்படும்.
    எள்சாகுபடி: 
           எள் பயிரிடும் விவசாயிகள் மானாவாரி மற்றும் இறவையில் எள் ரகங்களான டி.எம்.வி 3, டி.எம்.வி 4, டி.எம்.வி. 6, கோ 1, வி.ஆர்.ஐ1, எஸ்.வி.பி.ஆர்.1 ரகங்களையும், நெல் தரிசு மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் பயிரிடும் விவசாயிகள் வி. ஆர்.ஐ. 1 ரகத்தினையும் தேர்வு செய்து இப்பருவத்தில் விதைக்கலாம்.
  விவசாயிகள் இந்த மழையைப் பயன்படுத்தி பயறுவகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களைப் பயிரிட்டு நல்ல மகசூல் பெறலாமென்றார். மேலதிக தகவல்களுக்கு நிலையத் தலைவரை 94431 70556 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். 

சனி, 2 மார்ச், 2013

தோழர்களுக்கு முக்கிய அறிவிப்பு:



   மறைந்த புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.முத்துக்குமரன் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி விபத்தில் இறந்தார். அவருக்கு முதலாமாண்டு நினைவுநாளையொட்டி பல்வேறு பணிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆகையால் அதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சட்டத்தால் மீண்டது காவிரி: மீட்கப்படும் கச்சத்தீவு-- கு.ப. கிருஷ்ணன் பேச்சு


புதுக்கோட்டை மாவட்டம்    ஆலங்குடியில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் பிப்ரவரி. 28-ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி  ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப. கிருஷ்ணன்.பேசியது.    காசுகொடுத்தால் கற்பழிப்பு தடுக்கப்படுமா?  பெண்களை  பாலியலுக்குள்ளாக்குவோருக்கு தமிழக முதலமைச்சரின் ஆலோசனைப்படி அதிகபட்ச தண்டனைதான் தீர்வாகுமேதவிர நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிர்பயா நிதி தீர்வாகாது.   யார்தமிழ்உணர்வாளர்:        தமிழகத்தில் மின்தடையை ஏற்படுத்திய திமுக, மத்திய அரசிடம் இருந்து மின்சாரத்தை பெற முயலாமல் இதே நிலை நீடித்தால்தான் தமிழகஅரசை குற்றம்சாட்டியே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாமென்ற கலைஞரின் கனவு பலிக்காது.     தமிழகத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரத்தை பெற்றுத்தராத தமிழகத்தின் மத்தியஅமைச்சர்கள் வீட்டை முற்றுகையிடவேண்டுமென்ற போராட்டத்தை தமிழகமுதல்வர் அறிவித்தால் அதை நாங்கள் நிறைவேற்றத் தயார்.     இலங்கையில் லட்சம் தமிழர்களைக் கொன்றதையும், அதற்கு துணையான இலங்கை அதிபரை இந்தியாவுக்குள் நுழைய தடுக்கவும், மத்திய அரசு இலங்கை அரசுக்கு உதவி செய்வதைத் தடுக்கவும்,  தமிழகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள டக்ளஸ்தேவானந்தாவை கைது செய்ய தவரியவரும், சிகிச்சைக்காக தமிழகம் வந்த பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பியவருமான கலைஞரோ, இப்போது கண்டன அறிவிக்கை விடுவதும், இலங்கை தூதரகத்தை முற்றுகையிடபோவதாகவும் அறிவிக்கிறார். இத்தகைய நாடகமெல்லாம் கலைஞருக்கு எதார்த்தமானது. இதை தமிழர்கள் உணர்வார்கள்.     மக்களவைத் தேர்தலே தமிழர்களுக்கு தீர்வு:

         தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ், திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை படுதோல்வி அடையச் செய்வதே ஈழத்தமிழர்களுக்கு நாம் காட்டும் உண்மையான இரக்கமாகும்.  40 ஆண்டுகளாக போராடிய காவிரி பிரச்னைக்கு உச்சநீதிமன்றத்தின் உதவியால் தீர்வுகண்ட தமிழமுதலமைச்சரால், தமிழர்களின் மற்றொரு பிரதான பிரச்னையாக திகழும் கச்சத்தீவையும் மீட்கமுடியும்.      தமிழகத்தில் தெற்காசிய தடகளப்போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ளக்கூடாது என்ற அறிவித்தார் முதலமைச்சர். அந்த துணிவுகூட மத்தியஅரசுக்கு இல்லாமல் போனதால்தான் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் தலைகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் வெட்டிச்சென்றுள்ளனர்.     எதிரியிடம் சரணடையும் காங்.      முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை இலங்கையிலேயே வைத்து துப்பாக்கியால் அடிக்க முயன்ற சிங்களர்களைவிட தமிழர்களையே எதிரியாக கருதி  இலங்கைக்கு காங்கிரஸ்  அரசு அளிக்கும் உதவியால் இந்தியாவின் வடக்கு, தெற்கு பகுதியில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.ஆளுமைத்திறன் கொண்டவர் ஜெயலலிதா     நாட்டையே அச்சுறுத்தும் சீனரை எதிர்க்க காங்கிரஸ் அரசிடம் ஆளுமை, விலிமை இல்லை. ஆகையால், வலிமையான ஆளுமைத் திறன் கொண்ட தமிழக முதலமைச்சர்தான் இந்திய அரசுக்கு பொருத்தமாவார் என்றார்.

வியாழன், 28 பிப்ரவரி, 2013

பாயில் படுத்துறங்கும் பூனை

இங்கெல்லாம் இரவுல இடம் தரமாட்டாங்க. எத்தனை நாளுக்குத்தான் கூரையில தூங்குறது. இரவுல வேட்டைக்கு போகவேண்டியிருக்கு. இப்ப கரண்ட் இல்லாததால டி.வி.யில படமும் தெரியாது. அதனால யாரும் உள்ளே வரமாட்டாங்க. நம்ம கொஞ்சநேரம் கட்டில்மேல் உள்ள பாயில தூங்கிக்குவோம். 

புதன், 27 பிப்ரவரி, 2013

மதுவை மக்கள் மறுத்தால் அரசும் மறுக்கும்





     தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிவு, மக்கள் வரிப்பணம் விரையமாவது, விதவை, வறுமை, மாணவர்கள் குடித்துவிட்டு பள்ளிக்கு செல்லும் அவலம் உள்ளிட்டவைகளுக்கு பிரதானமாக திகழுவது அரசே மதுபானக்கடைகளை நடத்துவதுதான். இதை மூடவேண்டும் என திரு. வைகோ, தமிழருவிமணியன், ராமதாஸ், சீமான் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால், ஏழை மக்களின் உணர்வை மதிக்கின்ற வகையிலான இத்தகைய போராட்டங்களுக்கு அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. மக்களே, போராட்டக்குழுவினர் யாராக இருந்தாலும் அவர்களது நோக்கம் தமிழர்களை குடியிலிருந்து காக்க வேண்டும் என்பதாகும். அதற்கு மாநில அரசு மறுக்கிறது என்பதை நாம் உணர்கிறோம் அப்படி என்றால் நாம் ஒவ்வொருவரும் சுயகட்டுப்பாடுடன் குடிக்காமல் இருந்தால் கண்டிப்பாக மாநில அரசு தானாகவே மதுக்கடைகளை பூட்டிக்கொள்ளும்.  இதற்கு எந்த ஆர்ப்பாட்டமும் தேவையில்லை.  அதை மறுத்துவிட்டு குடித்துவிட்டு அரசு மதுக்கடையை நடத்துவது நான் வாழும் தமிழ்பூமியான தமிழ்நாட்டுக்கு சாபக்கேடுன்னு வாய்கிழிய முச்சந்தியில் உட்கார்ந்து கொண்டு பேசுவதை தயவுசெய்து நிறுத்திவிட்டு மதுவை ஆதரிப்போர்களுக்கு நாம் பாடம்புகட்டுவோமே....





   
                                                                             
       

விபத்தின் பின்னணி என்ன?


புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் பிப். 24-ம் தேதி செ. ராஜா(32) விபத்தில் ரத்த வெள்ளத்தில் மூழ்கி இறந்தார். இது அப்பகுதியினருடைய நெஞ்சிலிருந்தும் நீங்காத துயரமாகும். இதற்கு மதுபானம், வடகாடு- கொத்தமங்கலம் இடையே தரமற்ற சாலை, இணைப்பு சாலை குறித்த விவரம் இன்மை, போக்குவரத்து விதிமீறலே காரணமாகும். இத்தகைய கொடுமைக்கும், ராஜாவின் பெற்றோர், உறவினர்களின் பாவத்துக்கும் தமிழக ஆட்சியாளரே பொறுப்பாவார் என்பது மக்களின் கருத்து.


திங்கள், 25 பிப்ரவரி, 2013

ஆசிய கண்டத்தில் புகழ்பேசும் புதுகை


 குதிரை சிலைக்கு மாலை அணிவிக்க நீண்டவரிசையில் நிறுத்தப்பட்டிக்கும் வாகனங்கள்.
  குளமங்கலம் அய்யனார் கோயில் முன்புள்ள குதிரை சிலைக்கு பழங்களால் கோர்க்கப்பட்ட மாலையை அணிவிக்கும் யானை.

அணிவிக்கப்பட்ட மாலையுடன் குதிரை.


     ஆசிய கண்டம் அளவில் புதுக்கோட்டைமாவட்டம் புகழ்பேசும்  அளவுக்கு இம்மாவட்டத்தில்  சிற்பக்கலை சிறப்பு பெற்றுள்ளது. அதாவது, சித்தன்னவாசல் ஓவியம், சமணர்படுக்கை, அருங்காட்சியகம், கோட்டை, என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரு சிறப்பாக திகழ்வது ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் ஆற்றங்கரையில் அய்யனார் கோயில் முன்புரம் 33 அடி உயரத்தில் தாவிக்குதிக்கும் விதமாக அமைக்கப்பட்ட குதிரை சிலை ஆகும். இச்சிலைக்கு மாசிமகத்தையொட்டி 25.02.2013- அன்று காகிதம், பிளாஸ்ட்டிக், பழங்களால் கோர்க்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாலைகளை வாகனங்கள், மாட்டுவண்டிகள் மூலம் யானை, குதிரைகள் ஊர்வலத்தில் மேலதாளத்துடன் கொண்டுவந்து அணிவித்தனர். இங்கு ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் திரண்டதால் வில்லுனி ஆற்றங்கரையே திணறியது.
 

                                                                             
        

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

விவசாயத்தில் ஜெயிக்க விவசாயிகளின் போராட்டம்

  பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிய காலம் மாறி நிலத்தடிநீர் குறைவு, மின்வெட்டு இவைகளின் தாக்கத்தை எதிர்கொள்ள தற்போது தெளிப்பு முறையை கையாளும் புதுக்கோட்டை மாவட்ட ஆலங்குடி பகுதி விவசாயிகள்.                                             

சனி, 23 பிப்ரவரி, 2013

இயற்கையோடு வாழ்வோர் யாசகம் கேட்கமாட்டார்.


முன்பெல்லாம் 12 மாதங்களில் 4 மாதங்கல் தொடர்ந்து மழைபெய்யும். விதைக்கும் பருவத்தில் தொடங்கி அறுவடைக்குள் அந்த பருவமழை காலம் முடிவடையும். ஆனால், தற்போதைய நிலை புயல் மையம் கொண்டால் மட்டுமே மழை என்ற நிலைக்கு மாறியுள்ளது. இதனால் மழை காலம் வறட்சியாகிறது. இதன்தாக்கம் தான் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிடம் இருந்து குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுங்கன்னு நாம கேட்குறோம். அவங்களோ நாங்க குடிக்கணுமுன்னு கொடுக்க மறுக்குறாங்க. இப்போதே இப்படி என்றால் எதிர்காலத்தில் இதைவிட மோசமான நிலைக்கு நம் சந்ததி தள்ளப்படும். அப்படி என்றால் நாம் என்னசெய்வது? ஒரே வழி, அதிலும்  எளிமையானது. அதுதான் மூதாதையர் பின்பற்றிய இயற்கையோடு இயைந்த வாழ்க்கை.... மரத்தை வெட்டுவதில்லை, மரங்களை நடுவோம், பிளாஸ்ட்டிகை ஒழிப்போம், விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகளை புறக்கணிப்போம், வாகனங்களை புறக்கணிப்போம், மின்விளக்குகளை தவிர்ப்போம், பட்டாசு வெடிப்பதை தவிர்ப்போம், ஆடம்பரம் தவிர்ப்போம் இவற்றையெல்லாம் பின்பற்றுவது நமக்கு எளிமைதான் அதை செய்வோரை உலகமே பாராட்டும் என்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் உள்ள நெடுவாசல் வடக்கு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 21.02.2013-ல் நடைபெற்ற கல்வித் திருவிழாவில் ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப. கிருஷ்ணன் கூறினார். இதுதான் சாத்தியம்.


வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

வறட்சியால் வாழ்வை இழக்கும் புதுகை விவசாயிகள்


விவசாயத்தையே முதுகெலும்பாக கொண்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு,காவிரி பாசனத்துடன் பருவமழையைக் கொண்டும் விவசாயத்தை மேற்கொள்கின்றனர்.
     தமிழகத்தின் நீராதாரத்துக்கு பெரிதும் பயனளிக்கும்  வடகிழக்கு பருவமழை பொய்த்தது, கர்நாடகம் கைவிரித்தது, தமிழகத்தின் மின்உற்பத்தி மிகவும் பின்னடைவானது. இதனால் நெல் உள்ளிட்ட அனைத்து விவசாயமும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. தமிழக விவசாயிகள் வீதிக்கு வந்து போராடியதைத் தொடர்ந்து தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களாக உள்ள தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்ட விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த தமிழகஅரசு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளதோடு, சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்துள்ளது.
   மேலும் உள்ள வறட்சி மாவட்டங்களை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான குழுஆய்வு மேற்கொண்டு அளிக்கும் ஆய்வு அறிக்கையின்படியே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழகஅரசு அறிவித்துள்ளது.
     டெல்டா மாவட்டமான தஞ்சை மாவட்டத்தை ஒட்டியுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, கறம்பக்குடி ஆகிய வட்டங்களில் காவிரி, ஆழ்துளை கிணறு மூலம் 2.65 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட நெல் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் குடும்பத்தோடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களால் வளர்க்கப்படும் கால்நடைகளை அடிமாடுகளுக்கு விற்கும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
       புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில்  காரிப் பருவத்தில் மட்டும் சுமார் 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ஜனவரியில் கொள்முதல் தொடங்கியது. இந்நிலையில் இதே காலகட்டமான பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு மையத்திலும் சுமார் 700 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதன்படி மொத்த மையத்திலும் 44 ஆயிரத்து 100 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
  ஆனால், இந்த ஆண்டு  அதே மாவட்டத்தில் 25 மையங்கள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதில் 2 மையங்களில் சுமார் 7 டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
  மேலும், தமிழகத்தில் மாடு விற்பனைக்கு புகழ்பெற்று விளங்கும் புதுக்கோட்டையில் காளை மாடுகளாக காட்சி அளித்த மாட்டுச் சந்தையானது வறட்சியின் தாக்கத்தால் முல்மேல் போரித்திய துணியாக எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் கன்றுக் குட்டிகளுடன்கூடிய பசுமாடுகளே விற்பனைக்கு வருகின்றன. அதிலும், வாரச்சந்தையான வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணிக்கெல்லாம் முடியும் சந்தையில் நண்பகல் வரை காத்திருந்தாலும் யாரும் எதிர்பார்த்த விலைக்கு கேட்காததால் மாடுகளை அடிமாடு விலைக்கு விற்கவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.   அதோடு அறந்தாங்கி சந்தையிலும் விற்பனைக்காக ஓட்டிவரப்பட்ட மாடுகளை விற்பனை செய்யமுடியாமல் மீண்டும் வீட்டுக்கே ஓட்டிச் செல்கின்றனர்.
      இந்நிலையைக் கண்டித்து வடகாடு அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் கால்நடைகளை பாதுகாக்க கால்நடைகளுக்கு  அரசு மானியவிலையில் தீவனம் வழங்கவும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி கால்நடைகளுடன் அண்மையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆகையால் வறட்சியன் தாக்கத்தால் நெல்கொள்முதல் குறைவு, கால்நடைகளை அடிமாடுகளுக்கு விற்பது, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரேஷன்கடைகளை கூட்டம் அலைமோதுவது இவைகளையெல்லாம் வறட்சிக்கான ஒரு சான்றாக கொண்டு விரைவில் வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
   இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செங்கோடன் கூறியது.  நிலத்தை நம்பி மாற்றுவழி தெரியாமல் திகைத்து நிற்கும் விவசாயிகளையும், விவசாயைத்தையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதற்கு டெல்டா மாவட்டங்களுக்கு அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் புதுக்கோட்டை மாவட்ட டெல்டா பகுதிக்கும், அதோடு, 1989-ல் ஒருங்கிணைந்த டெல்டாபகுதியாக அறிவிக்கப்பட்ட ஆலங்குடி பகுதிக்கும் அனுமதித்து நிவாரணம் வழங்க வேண்டும். இக்கோரிக்கை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விரைவில் போராட்டத்தின் வாயிலாக கொண்டு செல்லப்படும் என்றார்.


நாங்க பொறுப்பல்ல... பிறரை சொல்லி தப்பிக்கும் அரசியல் வாதிகள்


  புதுக்கோட்டை மாவட்டத்தில் (22.02.2013 )இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டம். புதுக்கோட்டையில் மத்தியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியைக் குறைசொல்லி தமிழகத்தை ஆளும் அதிமுகவினர். அதே மாவட்டம் ஆலங்குடியில் மாநிலத்தை ஆளும் அதிமுகவை குறை சொல்லி மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியினர். இருவர்களது கோரிக்கையும் தமிழகத்தில் மின்தடை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகளாகும். இருவருமே மாறி மாறி குறை சொல்லிக்கொண்டால் யார்தான் இந்தப் பிரச்னைகளை தீர்ப்பது.
 இத்தகைய ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக நாம் உணர்வது இப்பிரச்னையை இருவராலும் தீர்க்கமுடியாது என்பதுதானே.. அப்படி என்றால் யார்தான் தீர்ப்பது.  மக்களே உணருங்கள்.


செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

தயாராகும் மாவீரன் வரலாற்றுச்சுவடு..


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் அ. வெங்கடாசலம். இத்தொகுதியில் மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராவும் இருந்த இவர் 7.10.2011-ல் படுகொலை செய்யப்பட்டார். இவரது நினைவுகளை பதிவு செய்யும்விதமாக முக்கிய புகைப்படங்கள், வீடியோ மற்றும் செய்திகள் ஆவணப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. ஆகையால், மாவீரன் அ. வெங்கடாசலத்தைப் பற்றிய தொகுப்புகள் இருந்தால் இந்த வலைதளத்தை அவசியம் தொடர்புகொள்ளவும்.
  truespy@rediffmail.com

திங்கள், 4 பிப்ரவரி, 2013

மாவீரன் நினைவாக வடகாட்டில் பிப். 9-ல் கபாடிபோட்டி


புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் 09.02.2013 தேதி பகல், இரவாக கபாடி போட்டி நடைபெறுகிறது. வடகாடு ஏ.வி. பேரவை சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள மைதானத்தில் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் நினைவாக கபடி போட்டி நடத்தப்படுகிறது.  இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல்பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 4 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 3 ஆயிரம் மற்றும் நான்காம் பிரசு ரூ. 2 ஆயிரம் மற்றும் பதக்கம், நினைவு பரிசும் வழங்கப்படுகிறது. போட்டிகளில் கலந்துகொள்ளும் அணிகள் பிப்ரவரி 9-ம் தேதி காலை 11 மணிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் தகவலுக்கு 97510 26224, 97864 99841, 86084 06766 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

                                                     கோப்புக்காட்சிdinamanialangudy@gmail.com

சனி, 2 பிப்ரவரி, 2013

முத்துக்குமரனின் கோரிக்கைகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் நிறைவேறுமோ?





புதுக்கோட்டை, மச்சுவாடியில் உள்ள தொழுநோயாளிகளோடு 2012-ல் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய முன்னாள் புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பி. முத்துக்குமரனிடம் காலணிகளை அரசே வழங்க வேண்டும், மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டுமென எம்எல்ஏவிடம் அங்குள்ள மக்கள் கண்ணீரோடு கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கைகள் 2013-ல் நிறைவேறியது. ஆனால், கோரிக்கையை முதலமைச்சரிடம் சொன்னவரைக் காணவில்லையே.....
                                                       என்கிறார்கள் நோயாளிகள்
 

திங்கள், 28 ஜனவரி, 2013

வறட்சியின் உச்சம்: வீதிக்கு வந்தது மனிதர்கள் மட்டுமா, மாடுகளும்தானே




  மழை இல்லை, காவிரியில தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, உரம்- மருந்து வாங்கமுடியலை, விளைஞ்ச பொருளை விற்கமுடியலை. இதனால விவசாயமே வெறுத்துப்போச்சு. எதோ ஒரு வழியில மனிதர்களுக்கெல்லாம் உணவு கிடைக்கிது. ஆனால், ஏழைகள் வளர்த்த மாடுகளை எங்க கொண்டுபோவது, வைக்கோலும்  இல்லை, புண்ணாக்கு விலையெல்லாம் மலையேரிப்போச்சு, கொஞ்சம் தரிசு நிலம் கூட இல்லாம போச்சே.. அதைத்தான் கேக்குறாங்க (28.01.2013)புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே கொத்தமங்கலம் மக்கள். சும்மாவா, மாடுகளோடுதான்....

செவ்வாய், 15 ஜனவரி, 2013

சமத்துவத்தை உணர்த்தும் கிராம மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே புள்ளான்விடுதியில் ஆதிதிராவிடர் உள்பட அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து பொதுவான இடத்தில் ஒரே அடுப்பில் பாரபட்சம் இல்லாமல் பொங்கல் வைத்து அதை ஒன்றாக படையலிட்டு அதை அனைவரும் பிரித்து பகிர்ந்து ருசித்து பொங்கல் விழா கொண்டாடினர். இதுதான் உண்மையான சமத்துவபொங்கல். இதையே அனைவரும் பின்பற்றுவோமே

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

தமிழனுக்கு வாழ்த்து



அனைவருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் தின வாழ்த்துக்கள்.
கே. சுரேஷ்    நிருபர்
 வடகாடு, ஆலங்குடி
 புதுக்கோட்டை. 622304

வெள்ளி, 4 ஜனவரி, 2013

சோறு இல்லாமல் சுருங்கும் வயிறு


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் மேலக்கோட்டை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் முத்து(25). பெற்றோர் இல்லாத பெண்ணை 2 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவரும், சொந்த  இடம் இல்லாமல் ஆற்றின் கரையில் குடில் அமைத்து தாய், மனைவியுடன் 3 கைக்குழந்தைகளோடு வசித்தவரான வே. வெற்றியப்பனும் வெடிதொழில்சாலையில் கூலிக்கு வெடி கட்டும்  ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் முத்து உடல் சிதறியநிலையில் இறந்தார். வெற்றியப்பன் படுகாயம் அடைந்தார்.  இந்த சூழலில் இவர்களது உழைப்பால் கிடைத்தது நாள் ஒன்றுக்கு கூலி ரூ. 200. இறப்புக்கும், பாதிப்புக்கும் பின்னால் அந்த தொழில்சாலையினால் பயன்(ஒன்றும் இல்லை)?.   இதுபோன்ற மரணபயத்தில் வேலை பார்ப்போருக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லையேல் இத்தகைய தொழில்சாலைகளுக்கு தடைவிதிக்க வேண்டும். பாவத்தை ஆட்சியாளர்கள் சுமக்கவேண்டாமே........
   முத்து: இவரது தாய், தந்தை உடல்நிலை பலவீனமானவர்கள். அண்ணனும் அப்படியே இவர்களால் குடும்பத்துக்கு வருமானம் இல்லை.அதோடு முத்துக்கு கல்யாணம் ஆயிற்று. 4 பேர்களது வாழ்வாராத்துக்கு ஒரே வழி முத்து ஒருவரே. தற்போது அவர் இல்லை. இனிமேல் இந்தக் குடும்பத்தினர் ஒரு வேலை சாப்பாட்டுக்கு என்ன செய்வார்களோ?.
  வெற்றியப்பன்: வெடி சத்தம் கேட்டு கைக்குழந்தைகளை விட்டுவிட்டு புறப்பட்டார் அவரது மனைவி மீனாட்சி. அதற்குள் கருவை முள்செடிக்குள் சிக்கிய குழந்தைகள் கத்தி, கதறினர். அதைப் பார்த்த தாய் 3 குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு கனவனைப் பார்க்க புறப்பட்டார். அதற்குள் வெற்றியப்பன் மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பார்க்க போகாமல் இங்கேயே இருக்குறீகளே என்றதற்கு..
    அவரது பதில், அவ்வளது தூரம் போக எனது கையில் காசு இல்லை என்றார். என்ன செய்யும் இந்தக் குடும்பம். இவர்களும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். சிகிச்சை பலனின்றி  வெற்றியப்பன் இறந்தார். அதோடு உரிமையாளர் காதர்மைதீனும் இறந்துவிட்டார்.