சனி, 16 மார்ச், 2013

அரசு நிதியை வீணடிக்கும் அதிகாரிகள்


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அற்புதமாதா நடுநிலைப்பள்ளியில் தமிழகமுதமைச்சரின் சிறப்பு பொது மருத்துவமுகாம் 16.03.2013-ல் நடைபெற்றது. ஏழை, எளியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இம்முகாம் குறித்து தகவல் தெரிவித்தால் மட்டுமே உரியவர் வந்து பயனடைவர். மாறாக, ஆலங்குடியில் நடைபெற்ற மருத்துவமுகாமானது அவ்வழியாக சென்றோருக்குத்தான் தெரியும். ஒலிபெருக்கி, துண்டறிக்கை, சுவரொட்டி இவைகள் மூலம் கட்டணம் செலுத்தியோ அல்லது செய்தித்தாள்கள் மூலம் இலவசமாகவோ தெரிவிக்கவில்லை. இதன் விளைவு மக்கள் அங்கு வரவில்லை. மருத்துவ பணியாளர்கள் அங்குமிங்கு குழுமி ஓய்வெடுத்தனர். அரசின் உன்னத திட்டம் இப்படியா வீணடிக்கவேண்டும். கணக்கெழுதியே பழகிய சில சுகாதாரத்துறை அதிகாரிகள்தானே இதற்கு காரணம். இம்முகாம் முடிவுக்கு கொண்டுவரும் என எதிர்பார்ப்போம்.....
வெறிச்சோடிய முகாம் நடைபெற்ற பள்ளி வளாகம்,


 மக்களுக்கு விளக்கம் அளிக்க அமைக்கப்பட்ட அரங்கு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக