புதன், 27 பிப்ரவரி, 2013

மதுவை மக்கள் மறுத்தால் அரசும் மறுக்கும்





     தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிவு, மக்கள் வரிப்பணம் விரையமாவது, விதவை, வறுமை, மாணவர்கள் குடித்துவிட்டு பள்ளிக்கு செல்லும் அவலம் உள்ளிட்டவைகளுக்கு பிரதானமாக திகழுவது அரசே மதுபானக்கடைகளை நடத்துவதுதான். இதை மூடவேண்டும் என திரு. வைகோ, தமிழருவிமணியன், ராமதாஸ், சீமான் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால், ஏழை மக்களின் உணர்வை மதிக்கின்ற வகையிலான இத்தகைய போராட்டங்களுக்கு அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. மக்களே, போராட்டக்குழுவினர் யாராக இருந்தாலும் அவர்களது நோக்கம் தமிழர்களை குடியிலிருந்து காக்க வேண்டும் என்பதாகும். அதற்கு மாநில அரசு மறுக்கிறது என்பதை நாம் உணர்கிறோம் அப்படி என்றால் நாம் ஒவ்வொருவரும் சுயகட்டுப்பாடுடன் குடிக்காமல் இருந்தால் கண்டிப்பாக மாநில அரசு தானாகவே மதுக்கடைகளை பூட்டிக்கொள்ளும்.  இதற்கு எந்த ஆர்ப்பாட்டமும் தேவையில்லை.  அதை மறுத்துவிட்டு குடித்துவிட்டு அரசு மதுக்கடையை நடத்துவது நான் வாழும் தமிழ்பூமியான தமிழ்நாட்டுக்கு சாபக்கேடுன்னு வாய்கிழிய முச்சந்தியில் உட்கார்ந்து கொண்டு பேசுவதை தயவுசெய்து நிறுத்திவிட்டு மதுவை ஆதரிப்போர்களுக்கு நாம் பாடம்புகட்டுவோமே....





   
                                                                             
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக