வெள்ளி, 8 மார்ச், 2013

கோடை மழையும்,பயறு சாகுபடியும்

  புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் க. வைரவன்   வெளியிட்ட செய்திக்குறிப்பு:
   இலங்கை அருகே ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.   கோடையில் பெய்யும் இம்மழையை பயன்படுத்தி நெல் அறுவடை செய்யப்பட்ட நிலம் உள்ளிட்ட விளை நிலங்களை நன்கு உழவு செய்ய வேண்டும்.  
    நீர்பாசன வசதி மற்றும் வறட்சியான நிலங்களில் உளுந்தையும், முழுவதும் மானாவாரியாக பயிர் செய்யக் கூடிய நிலங்களில் எள்ளையும் தேர்ந்துதெடுத்து விதைக்கலாம்.
  உளுந்து சாகுபடி:
       உளுந்தைப் பொறுத்தவரையில் மானாவாரி மற்றும் இறவையில் வம்பன் 4, வம்பன் 5, வம்பன் 6 ரகத்தையும், நெல் அறுவடை செய்யப்பட்ட தரிசில் ஏ.டி.டி 3, வம்பன் 4, வம்பன் 5 மற்றும் வம்பன் 6 ரகங்களை விதைக்கலாம். 
    தேவையான உளுந்து விதை:  உழுந்தை தனிப்பயிராக பயிரிட ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதையும் ஊடுபயிராக பயிரிட 4 கிலோ விதையும் மற்றும் நெல் தரிசில் பயிரிட 10 கிலோ விதையும் தேவைப்படும்.
    எள்சாகுபடி: 
           எள் பயிரிடும் விவசாயிகள் மானாவாரி மற்றும் இறவையில் எள் ரகங்களான டி.எம்.வி 3, டி.எம்.வி 4, டி.எம்.வி. 6, கோ 1, வி.ஆர்.ஐ1, எஸ்.வி.பி.ஆர்.1 ரகங்களையும், நெல் தரிசு மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் பயிரிடும் விவசாயிகள் வி. ஆர்.ஐ. 1 ரகத்தினையும் தேர்வு செய்து இப்பருவத்தில் விதைக்கலாம்.
  விவசாயிகள் இந்த மழையைப் பயன்படுத்தி பயறுவகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களைப் பயிரிட்டு நல்ல மகசூல் பெறலாமென்றார். மேலதிக தகவல்களுக்கு நிலையத் தலைவரை 94431 70556 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். 

1 கருத்து: