சனி, 16 மார்ச், 2013

பன்னிரண்டு வயதுப் பாலகனைச் சுட்டஅந்தப் பாவிகளை விட்டு விட்டோம். - சேந்தன்குடி கவிஞர்.க.புத்திரசிகாமணி,


வென்றததைப்… பகைவனை வீழ்த்திய வரலாற்றை,
வீரத்தைத் தொலைத்து விட்டோம்.
வீட்டுக்கொரு டி.வியும் ஆளுக்கொரு செல்லுமாய்
விவேகத்தைப் புதைத்து விட்டோம்.

என்றிதைச் சொன்னாலும் ஏறாது. சேற்றுக்குள்
எறுமைபோல் அமிழ்ந்து விட்டோம்.
எதிரிகளின் கொடுமைகள் இதற்குமேல் பொறுக்காது
எல்லையைக் கடந்து விட்டோம்.

பன்னிரண்டு வயதுப் பாலகனைச் சுட்டஅந்தப்
பாவிகளை விட்டு விட்டோம்.
படங்களைப் பார்த்தே பதறிப்போய் பகைவர்களைப்
பலிவாங்க கிளம்பி விட்டோம்.

ஒன்றரை லட்சம்பேர் உயிரினைக் குடித்துத்… தமிழா்கள்
ஒருமிக்க அழித்த... அந்த
“ஒருத்தனை” உலகத்தில் உலவிட விடமாட்டோம்
உயிரோடு விடவே மாட்டோம்.

…………………………………………………


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக