புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் மேலக்கோட்டை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் முத்து(25). பெற்றோர் இல்லாத பெண்ணை 2 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவரும், சொந்த இடம் இல்லாமல் ஆற்றின் கரையில் குடில் அமைத்து தாய், மனைவியுடன் 3 கைக்குழந்தைகளோடு வசித்தவரான வே. வெற்றியப்பனும் வெடிதொழில்சாலையில் கூலிக்கு வெடி கட்டும் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் முத்து உடல் சிதறியநிலையில் இறந்தார். வெற்றியப்பன் படுகாயம் அடைந்தார். இந்த சூழலில் இவர்களது உழைப்பால் கிடைத்தது நாள் ஒன்றுக்கு கூலி ரூ. 200. இறப்புக்கும், பாதிப்புக்கும் பின்னால் அந்த தொழில்சாலையினால் பயன்(ஒன்றும் இல்லை)?. இதுபோன்ற மரணபயத்தில் வேலை பார்ப்போருக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லையேல் இத்தகைய தொழில்சாலைகளுக்கு தடைவிதிக்க வேண்டும். பாவத்தை ஆட்சியாளர்கள் சுமக்கவேண்டாமே........
முத்து: இவரது தாய், தந்தை உடல்நிலை பலவீனமானவர்கள். அண்ணனும் அப்படியே இவர்களால் குடும்பத்துக்கு வருமானம் இல்லை.அதோடு முத்துக்கு கல்யாணம் ஆயிற்று. 4 பேர்களது வாழ்வாராத்துக்கு ஒரே வழி முத்து ஒருவரே. தற்போது அவர் இல்லை. இனிமேல் இந்தக் குடும்பத்தினர் ஒரு வேலை சாப்பாட்டுக்கு என்ன செய்வார்களோ?.
வெற்றியப்பன்: வெடி சத்தம் கேட்டு கைக்குழந்தைகளை விட்டுவிட்டு புறப்பட்டார் அவரது மனைவி மீனாட்சி. அதற்குள் கருவை முள்செடிக்குள் சிக்கிய குழந்தைகள் கத்தி, கதறினர். அதைப் பார்த்த தாய் 3 குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு கனவனைப் பார்க்க புறப்பட்டார். அதற்குள் வெற்றியப்பன் மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பார்க்க போகாமல் இங்கேயே இருக்குறீகளே என்றதற்கு..
அவரது பதில், அவ்வளது தூரம் போக எனது கையில் காசு இல்லை என்றார். என்ன செய்யும் இந்தக் குடும்பம். இவர்களும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். சிகிச்சை பலனின்றி வெற்றியப்பன் இறந்தார். அதோடு உரிமையாளர் காதர்மைதீனும் இறந்துவிட்டார்.
சோறு இல்லாது சுறுங்கும்வயிறு படித்தேன் பார்த்தேன் நெஞ்சே நொறுங்குவது போல்இருந்தது.
பதிலளிநீக்குஏ. கருப்பையன், தேசிய நல்லாசிரியர். புதுக்கோட்டை(நெடுவாசல்)