புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூர் ஆறுமுகம் மெட்ரிக் பள்ளியில் 7.3.2013-ல் நடைபெற்ற ஆண்டுவிழாவில் மாணவர்களைப் பாராட்டி சமூகஆர்வளர், வழக்குரைஞர் எஸ்.பி. ராஜா. பேசியது.
கல்விதான் நாட்டை வலிமைப்படுத்துமென கல்விக்காக மத்திய, மாநில அரசுகள் ஏராளமாய் நிதி ஒதுக்குகிறது. அதேசயம், மாணவர்கள் உயிரைமாய்த்துக் கொள்ளுதல், சமூகவிரோத செயலில் ஈடுபடுதல், பாலியல், திராவகம் வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் எல்லாம் கல்வியானது சமூகத்துக்கு பயனளிக்கும் வகையில் இல்லை என்பதை அடையாளப்படுத்துவதாக கருதப்படுகிறது.
இதையெல்லம் இப்படியே விட்டுவிட்டால் எதிர்காலத்தில் சமூகசீரழிவுகள் இதைவிட அதிகமாகும். இப்போதைய பிரச்னைகளால் பிள்ளைகளை வளர்க்க பெற்றோர்கள் கவலைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், கல்வியை கற்றுக்கொடுத்துவிட்டால் சமூகம் ஒழுக்கமாக இருக்கும் என்பதை நிலைநாட்டும் வகையில் சமூகத்தோடு தொடர்பை ஏற்படுத்தும் வகையில் கல்வியில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக