குறைந்தளவான பருவ மழை, தொடர்மின்தடை,
இவற்றல் நெல், கடலை உள்ளிட்ட பயிர் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவுப்பற்றாக்குறையோடு வைக்கோல் தட்டுப்பாடு, தீவனங்கள் கடும் விலை உயர்வினால் கால்நடை வளர்ப்பும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பா சாகுபடியில் அறுவடை செய்யப்பட்டு வயலில் விடப்பட்ட வைக்கோலையும் அதிக விலை கொடுத்து கேரள வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
இதன்தாக்கம் சந்தைகளில் மாடுகளை குறைந்த விலைக்கு அடிமாடுக்கே விற்பனை செய்ய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து லாரிகளில் ஏற்றிவரப்பட்ட பலவிதான மாடுகளை கிராம பகுதிகளுக்குள் கையில் பிடித்துக் கொண்டு மாடு வேண்டுமா என விவசாயிகள் தாங்கள் வளர்த்த மாடுகளை கூவி, கூவி விற்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக