சிறுதானியங்களை பாதுகாக்க வேண்டும், இயற்கை விவசாயம் மேற்கொள்ள வேண்டுமென்பது அய்யா இயற்கை விஞ்ஞானி நம்மாள்வாரின் பிரதான கோரிக்கை. இந்த நியாயமான கோரிக்கையை அவர் பல்வேறு வகையில் மக்களிடமும், ஆட்சியாளர்களிடமும் எடுத்துகூறி வருகிறார். ஆரம்பத்தில் இதற்கு அரசு செவி சாய்க்கவில்லை. நிலைமையை உணர்ந்த அதிகாரிகள் தற்போது, விவசாயிகள் வைத்திருக்கும் பாரம்பரிய தானியங்களை அந்தந்த பகுதியிலுள்ள வேளாண் ஆராய்ச்சியாளர்களிடம் கொடுத்து காப்புரிமை பெற்றுக்கொள்ளுங்கள் என வேளாண் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இப்பணியை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முன்னெடுத்துள்ளது.
தமிழ்நாடுக்கு சொந்தமான வேம்பு மரம் அமெரிக்கா காப்புரிமை பெற்றபோதுதான் உணர்ந்துள்ளார்கள் நம்பஆட்கள். இதையாவது முழுசா நிறைவேற்றட்டும். அய்யாவின் கோரிக்கை நிறைவேறட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக