வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

நாங்க பொறுப்பல்ல... பிறரை சொல்லி தப்பிக்கும் அரசியல் வாதிகள்


  புதுக்கோட்டை மாவட்டத்தில் (22.02.2013 )இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டம். புதுக்கோட்டையில் மத்தியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியைக் குறைசொல்லி தமிழகத்தை ஆளும் அதிமுகவினர். அதே மாவட்டம் ஆலங்குடியில் மாநிலத்தை ஆளும் அதிமுகவை குறை சொல்லி மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியினர். இருவர்களது கோரிக்கையும் தமிழகத்தில் மின்தடை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகளாகும். இருவருமே மாறி மாறி குறை சொல்லிக்கொண்டால் யார்தான் இந்தப் பிரச்னைகளை தீர்ப்பது.
 இத்தகைய ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக நாம் உணர்வது இப்பிரச்னையை இருவராலும் தீர்க்கமுடியாது என்பதுதானே.. அப்படி என்றால் யார்தான் தீர்ப்பது.  மக்களே உணருங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக