சனி, 23 பிப்ரவரி, 2013

இயற்கையோடு வாழ்வோர் யாசகம் கேட்கமாட்டார்.


முன்பெல்லாம் 12 மாதங்களில் 4 மாதங்கல் தொடர்ந்து மழைபெய்யும். விதைக்கும் பருவத்தில் தொடங்கி அறுவடைக்குள் அந்த பருவமழை காலம் முடிவடையும். ஆனால், தற்போதைய நிலை புயல் மையம் கொண்டால் மட்டுமே மழை என்ற நிலைக்கு மாறியுள்ளது. இதனால் மழை காலம் வறட்சியாகிறது. இதன்தாக்கம் தான் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிடம் இருந்து குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுங்கன்னு நாம கேட்குறோம். அவங்களோ நாங்க குடிக்கணுமுன்னு கொடுக்க மறுக்குறாங்க. இப்போதே இப்படி என்றால் எதிர்காலத்தில் இதைவிட மோசமான நிலைக்கு நம் சந்ததி தள்ளப்படும். அப்படி என்றால் நாம் என்னசெய்வது? ஒரே வழி, அதிலும்  எளிமையானது. அதுதான் மூதாதையர் பின்பற்றிய இயற்கையோடு இயைந்த வாழ்க்கை.... மரத்தை வெட்டுவதில்லை, மரங்களை நடுவோம், பிளாஸ்ட்டிகை ஒழிப்போம், விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகளை புறக்கணிப்போம், வாகனங்களை புறக்கணிப்போம், மின்விளக்குகளை தவிர்ப்போம், பட்டாசு வெடிப்பதை தவிர்ப்போம், ஆடம்பரம் தவிர்ப்போம் இவற்றையெல்லாம் பின்பற்றுவது நமக்கு எளிமைதான் அதை செய்வோரை உலகமே பாராட்டும் என்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் உள்ள நெடுவாசல் வடக்கு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 21.02.2013-ல் நடைபெற்ற கல்வித் திருவிழாவில் ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப. கிருஷ்ணன் கூறினார். இதுதான் சாத்தியம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக