ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

இந்திய கடற்படை கப்பல் விபத்தை முன்கூட்டியே கணித்த தமிழ் பஞ்சாங்கம்

லாவண்யா பதிப்பகத்தின் சார்பில் 2013-14-ம் ஆண்டிற்கான விஜய வருடத்தில் பஞ்சாங்கம் ஆற்காடு கா.வே. சீதாராமய்யரால் கணித்து எழுதப்பட்டுள்ளது.
 இந்த தமிழ்ஆண்டு பஞ்சாங்கத்தில் ஆடி 29-ம் தேதி (14.08.2013)புதன்கிழமை அன்று பகல் நேரத்தில் கடலில் சரக்கு கப்பல்களில் சில பிரச்னை ஏற்பட்டு திடீர் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
   இவ்வாறு குறிப்பிட்டுள்ளபடி அதே நாளில் மும்பை கடற்படைத்தளத்தில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 18 வீரர்கள் உயிரிழந்தனர்.
   அதுமட்டுமின்றி வடநாடு பகுதியில் உள்ள காசி, கயா, அயோத்தி, போன்ற பகுதிகளில் யாத்ரீகர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி அங்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதிருப்பது குறிப்பிடத்தக்கது.
   முன்னொரு காலத்தில் அத்வாசிய பொருள்களில் ஒன்றாக இருந்தது. பஞ்சாங்கம். முன்னோர்கள் எதை செய்தாலும் பஞ்சாங்கத்தை பின்பற்றியே செய்தனர்.  நாளடைவில் அறிவியல் தொழில்நுட்பங்களை பின்பற்றத் தொடங்கியதால் இவற்றின் பயன்பாடு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இருப்பினும், சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டபடி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் பஞ்சாங்கத்தின் கணிப்பு மெய்ப்பிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாங்கம் பார்ப்போர் கூறுகின்றனர். இருப்பினும் இந்தக்குறிப்பு வேறு ஏதேனும் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக