சட்டத்தால் மீண்டது காவிரி: மீட்கப்படும் கச்சத்தீவு-- கு.ப. கிருஷ்ணன் பேச்சு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் பிப்ரவரி. 28-ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப. கிருஷ்ணன்.பேசியது. காசுகொடுத்தால் கற்பழிப்பு தடுக்கப்படுமா? பெண்களை பாலியலுக்குள்ளாக்குவோருக்கு தமிழக முதலமைச்சரின் ஆலோசனைப்படி அதிகபட்ச தண்டனைதான் தீர்வாகுமேதவிர நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிர்பயா நிதி தீர்வாகாது. யார்தமிழ்உணர்வாளர்: தமிழகத்தில் மின்தடையை ஏற்படுத்திய திமுக, மத்திய அரசிடம் இருந்து மின்சாரத்தை பெற முயலாமல் இதே நிலை நீடித்தால்தான் தமிழகஅரசை குற்றம்சாட்டியே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாமென்ற கலைஞரின் கனவு பலிக்காது. தமிழகத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரத்தை பெற்றுத்தராத தமிழகத்தின் மத்தியஅமைச்சர்கள் வீட்டை முற்றுகையிடவேண்டுமென்ற போராட்டத்தை தமிழகமுதல்வர் அறிவித்தால் அதை நாங்கள் நிறைவேற்றத் தயார். இலங்கையில் லட்சம் தமிழர்களைக் கொன்றதையும், அதற்கு துணையான இலங்கை அதிபரை இந்தியாவுக்குள் நுழைய தடுக்கவும், மத்திய அரசு இலங்கை அரசுக்கு உதவி செய்வதைத் தடுக்கவும், தமிழகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள டக்ளஸ்தேவானந்தாவை கைது செய்ய தவரியவரும், சிகிச்சைக்காக தமிழகம் வந்த பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பியவருமான கலைஞரோ, இப்போது கண்டன அறிவிக்கை விடுவதும், இலங்கை தூதரகத்தை முற்றுகையிடபோவதாகவும் அறிவிக்கிறார். இத்தகைய நாடகமெல்லாம் கலைஞருக்கு எதார்த்தமானது. இதை தமிழர்கள் உணர்வார்கள். மக்களவைத் தேர்தலே தமிழர்களுக்கு தீர்வு:
தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ், திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை படுதோல்வி அடையச் செய்வதே ஈழத்தமிழர்களுக்கு நாம் காட்டும் உண்மையான இரக்கமாகும். 40 ஆண்டுகளாக போராடிய காவிரி பிரச்னைக்கு உச்சநீதிமன்றத்தின் உதவியால் தீர்வுகண்ட தமிழமுதலமைச்சரால், தமிழர்களின் மற்றொரு பிரதான பிரச்னையாக திகழும் கச்சத்தீவையும் மீட்கமுடியும். தமிழகத்தில் தெற்காசிய தடகளப்போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ளக்கூடாது என்ற அறிவித்தார் முதலமைச்சர். அந்த துணிவுகூட மத்தியஅரசுக்கு இல்லாமல் போனதால்தான் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் தலைகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் வெட்டிச்சென்றுள்ளனர். எதிரியிடம் சரணடையும் காங். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை இலங்கையிலேயே வைத்து துப்பாக்கியால் அடிக்க முயன்ற சிங்களர்களைவிட தமிழர்களையே எதிரியாக கருதி இலங்கைக்கு காங்கிரஸ் அரசு அளிக்கும் உதவியால் இந்தியாவின் வடக்கு, தெற்கு பகுதியில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.ஆளுமைத்திறன் கொண்டவர் ஜெயலலிதாநாட்டையே அச்சுறுத்தும் சீனரை எதிர்க்க காங்கிரஸ் அரசிடம் ஆளுமை, விலிமை இல்லை. ஆகையால், வலிமையான ஆளுமைத் திறன் கொண்ட தமிழக முதலமைச்சர்தான் இந்திய அரசுக்கு பொருத்தமாவார் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக