புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மே 3-ம் தேதி நடைபெற்ற பத்திரிகை சுதந்திர தின விழாவில் கவிஞர் தங்கம்மூர்த்தி பேசியது.
பாமரனின் பள்ளிக்கூடம் தேநீர்கடையாகவும், அங்கு பணிபுரியும்
ஆசிரியர்களாக பத்திரிகைகள் திகழ்கின்றன. ஆகையால், மக்களின் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கவும், கருத்துக்களை மக்களிடம் கொண்டுசெல்லவும், குறைகளை அச்சமின்றி வெளியிட வேண்டுமென்றால் பத்திரிகைகளின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குக்கிராமத்தில் முன்மாதிரியாவுள்ள மாங்குடி அரசுப் பள்ளியை வெளி உலகம் அறிந்ததும். அதேபோல, ஊழல்கள் மக்களுக்கு தெரிந்ததும் பத்திரிகை சுதந்திரத்தின் வெளிப்பாடாகும்.
இருப்பினும், மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் பாதுகாப்பாக இருக்கிறது என்றாலும் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது பின்னடைவாகத்தான் உள்ளது.
இதுதொடர்பாக 179 நாடுகளைக்கொண்டு சர்வதேச அமைப்பின் கணக்கெடுப்புப்படி பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடத்தில் உள்ளது. இந்தியா 140 வது இடத்திலும், சீனா 174-வது இடத்திலும் உள்ளது.
இந்தியாவில் காஷ்மீர், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட தாக்குதல்களினால் இந்தியா தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
தனிமனித சிந்தனை நாட்டுக்கு முக்கியம், இருப்பினும் செய்தியாளர்கள் தான் கொண்டிருப்பதில் நல்லவற்றையே வெளிக்கொணர வேண்டும். இதுபோன்ற விழாக்களை மக்கள் விழாக்களாக மாற்ற வேண்டுமென்றார்.
விழாவுக்கு த.மு.எ.க.ச மாவட்டச் செயலர் ரமா.ராமநாதன் தலைமை வகித்தார்.
எழுத்தாளர் குயிலிமுனுசாமி, கவிஞர் பாலா, வட்டாட்சியர் கோவிந்தராஜ், பேரூராட்சித் தலைவர் ஏ.டி.மனமோகன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை மக்கள் நீதிமன்ற பிரதிநிதி கே. செந்தில்ராஜா மற்றும் செய்தியாளர்கள் செய்தனர்.
பாமரனின் பள்ளிக்கூடம் தேநீர்கடையாகவும், அங்கு பணிபுரியும்
ஆசிரியர்களாக பத்திரிகைகள் திகழ்கின்றன. ஆகையால், மக்களின் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கவும், கருத்துக்களை மக்களிடம் கொண்டுசெல்லவும், குறைகளை அச்சமின்றி வெளியிட வேண்டுமென்றால் பத்திரிகைகளின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குக்கிராமத்தில் முன்மாதிரியாவுள்ள மாங்குடி அரசுப் பள்ளியை வெளி உலகம் அறிந்ததும். அதேபோல, ஊழல்கள் மக்களுக்கு தெரிந்ததும் பத்திரிகை சுதந்திரத்தின் வெளிப்பாடாகும்.
இருப்பினும், மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் பாதுகாப்பாக இருக்கிறது என்றாலும் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது பின்னடைவாகத்தான் உள்ளது.
இதுதொடர்பாக 179 நாடுகளைக்கொண்டு சர்வதேச அமைப்பின் கணக்கெடுப்புப்படி பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடத்தில் உள்ளது. இந்தியா 140 வது இடத்திலும், சீனா 174-வது இடத்திலும் உள்ளது.
இந்தியாவில் காஷ்மீர், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட தாக்குதல்களினால் இந்தியா தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
தனிமனித சிந்தனை நாட்டுக்கு முக்கியம், இருப்பினும் செய்தியாளர்கள் தான் கொண்டிருப்பதில் நல்லவற்றையே வெளிக்கொணர வேண்டும். இதுபோன்ற விழாக்களை மக்கள் விழாக்களாக மாற்ற வேண்டுமென்றார்.
விழாவுக்கு த.மு.எ.க.ச மாவட்டச் செயலர் ரமா.ராமநாதன் தலைமை வகித்தார்.
எழுத்தாளர் குயிலிமுனுசாமி, கவிஞர் பாலா, வட்டாட்சியர் கோவிந்தராஜ், பேரூராட்சித் தலைவர் ஏ.டி.மனமோகன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை மக்கள் நீதிமன்ற பிரதிநிதி கே. செந்தில்ராஜா மற்றும் செய்தியாளர்கள் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக