புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் மே18 (இரவு)இலங்கையில் முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்தோருக்கு நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஆலங்குடி எம்எல்ஏ குப கிருஷ்ணன் பேசியது.
தமிழினம் 64 நாடுகளில் வாழும் தேசிய இனம். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பேசப்பட்ட மொழிகலெல்லாம் இன்று அதற்கான சுவடே இல்லாமல் அழிந்துவிட்டது. ஆனால், பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு கொண்டுள்ள தமிழ்மொழியை எவராலும் அழிக்க முடியாது. அதை அழிக்க முற்படுவோர் வீழ்த்தப்படுவர். மொழி தலைத்தோங்க உலகத் தமிழரெல்லாம் ஒன்றுபட வேண்டும் இதுபோன்ற நிகளழ்ச்சிகளை முன்னெடுத்துச்செல்ல வேண்டும். வீட்டுக்குள் வேறு மொழியையும், வெளியில் தமிழ்மொழியையும் பேசுவோரெல்லாம் தமிழரல்லர் என்றார்.
கடலூரில் நாம் தமிழர் கட்சி கூட்டத்துக்கு அரசு தடைவிதித்துள்ள நிலையில், கொத்தமங்கலத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் மறைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் ஆகையால் அவரது படம் வைக்க தடை செய்ப்பட்டது. ஒலி பெருக்கி பயன்படுத்தவும் கீரமங்கலம் போலீஸாரால் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதையும் மீறி பிரபாகரன் மகன் படம், ஒலிபெருக்கியுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக