வெள்ளி, 21 ஜூன், 2013

சொன்னதுக்கு என்ன மரியாதை: ஆலங்குடி எம்எல்ஏ ஆவேசம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வாண்டாகோட்டை அருகே பால் வண்டியும், தனியார்பேருந்தும்( பிஎல்.ஏ) ஜூன் 19-ம் தேதி  மோதிக்கொண்டதில் கைக்குறிச்சி ஊராட்சி விஜயரகுநாதபுரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் படித்த 7 மாணவர்கள், பால் வண்டி ஓட்டுநர் உள்பட 8 பேர் சம்வஇடத்திலேயே பலியாயினர். இவர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நபருக்கு தலா ரூ. 1 லட்சத்தை ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப. கிருஷ்ணன், ஆட்சியர் செ. மனோகரன் உள்ளிட்டோர் ஜூன் 20 -ம் தேதி வழங்கினர்.
 அதன்பிறகு ஆட்சியரகத்தில் மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் விபத்தில்லாமல் பேருந்தை இயக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், அதிக பட்சம் 60 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும், அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லவேண்டுமென்ற அரசாணையை பின்பற்ற வேண்டும். இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
      கூட்டத்தை முடித்துவிட்டு ஆலங்குடி சட்டப்பேரவை  உறுப்பனர் கு.ப. கிருஷ்ணன் காரில் திருச்சிக்கு சென்றுகொண்டிருந்தார். மாத்தூர் அருகே சென்றபோது எதிரே திருச்சியிலிருந்து காரைக்குடி நோக்கி அதிவிரைவாக வந்த தனியார் பேருந்து (என். எல்.எல்) எம்.எல்.ஏ. வின் காரை இடித்து தள்ளுவதுபோல மின்னல்வேகத்தில் காரை நோக்கி வந்துள்ளது. சுதாரித்துக்கொண்ட காரின் ஓட்டுநர் கணம் நேரத்தில் சாலையை விட்டு காரை இறக்கினார். இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை.
     இதைத்தொடர்ந்து அங்கிருந்தபடியே மாவட்ட ஆட்சியரை செல்போனில் தொடர்புகொண்ட எம்எல்ஏ கு. ப. கிருஷ்ணன், அரசின் விதிமுறைகளை மீறி, நாம் கூட்டத்தின் வாயிலாக சொல்லியும் மதிக்காத தனியார் பேருந்து (என்என்எல்) மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதன்படி புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலரால் அந்த பேருந்து பறிமுதல் செய்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, ஓட்டிநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக