திங்கள், 3 டிசம்பர், 2012

தடைபடும் பேருந்து சேவைக்கு பணியாளர்களின் பற்றாக்குறையே காரணம்


கீரமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆலங்குடி வழியாக கீரமங்கலம், புதுக்கோட்டை இடையேயான பேருந்தை இயக்கை தொடக்கி வைத்தார். அப்போது, நவ.10-ம் தேதி வடகாடு வழியாக புளிச்சங்காடு-கைகாட்டி யிலிருந்து புதுக்கோட்டைக்கு தொடக்கி வைக்கப்பட்ட பேருந்து தொடக்க நாளில் இருந்து இயக்கப்படவில்லையே என பொதுமக்களின் கோரிக்கைக்கு ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப.கிருஷ்ணன் மேலும் கூறியது.
அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறை உள்ளது. புதிய ஊழியர்கள் நியமனத்துக்கும் நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி புதிதாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து வழித்தடத்திலும் தடையின்றி பேருந்துகள் இயக்கப்படும்.
     விழாவில் கீரமங்கலம்  திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் துரை. தனசேகரன், பேரூராட்சித் தலைவர்கள் கீரமங்கலம் துரை. தனலெட்சுமி, ஆலங்குடி ஏ.டி.மனமோகன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, ஆலங்குடியில் நடைபெற்ற விழாவில் ஆலங்குடியிலிருந்து அறந்தாங்கிக்கு பேருந்தை தொடக்கி வைத்தார்.      


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக