திங்கள், 3 டிசம்பர், 2012

தடைபடும் பேருந்தால் தடுமாறும் பயணிகள்



ஆலங்குடி பகுதியில் அரசு பேருந்து இயக்கம் தடைபடுவதால் மக்கள் தடுமாறுகின்றனர்.
  கடுக்காகாடு வழியாக ஆலங்குடி, கறம்பக்குடி இடையே அரசு நகர் பேருந்து இயக்கப்படுகிறது. இப்பேருந்தை நம்பியே கடுக்காகாடு, வாணக்கன்காடு, கோட்டைக்காடு பகுதி மக்கள் உள்ளனர். நாளொன்றுக்கு 3 முறை இயக்கப்படும் இப்பேருந்து சில நேரங்களில் வருவதில்லை. உத்தரவாதமற்ற நிலையிலேயே இயக்கப்படுகிறது. மோசமான நிலையிலான பேருந்தாகவும் இருப்பதால் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நின்றுவிடுகிறது. ஆகையால், இது குறித்து நடவடிக்கை எடுத்து ஆலங்குடி- கடுக்காகாடு- கறம்பக்குடி இடையே இயக்கப்படும் நகர் பேருந்தை தடையில்லாமல் இயக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக