ஆலங்குடி பகுதியில் அரசு பேருந்து இயக்கம் தடைபடுவதால் மக்கள் தடுமாறுகின்றனர்.
கடுக்காகாடு வழியாக ஆலங்குடி, கறம்பக்குடி இடையே அரசு நகர் பேருந்து இயக்கப்படுகிறது. இப்பேருந்தை நம்பியே கடுக்காகாடு, வாணக்கன்காடு, கோட்டைக்காடு பகுதி மக்கள் உள்ளனர். நாளொன்றுக்கு 3 முறை இயக்கப்படும் இப்பேருந்து சில நேரங்களில் வருவதில்லை. உத்தரவாதமற்ற நிலையிலேயே இயக்கப்படுகிறது. மோசமான நிலையிலான பேருந்தாகவும் இருப்பதால் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நின்றுவிடுகிறது. ஆகையால், இது குறித்து நடவடிக்கை எடுத்து ஆலங்குடி- கடுக்காகாடு- கறம்பக்குடி இடையே இயக்கப்படும் நகர் பேருந்தை தடையில்லாமல் இயக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக