ஆலங்குடி அருகேயுள்ள கீரமங்கலத்தில் வியாழக்கிழமை நாய்களை பிடிக்க துப்பாக்கியால் சுட்டபோது கிராம நிர்வாக அலுவலர் மீது குண்டு பாய்ந்தது.
கீரமங்கலம் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை அழிக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நாய்கள் சுட்டு கொல்லப்பட்டு அவைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு நாய்க்கு வைத்த குறி தடுமாறி அங்குள்ள கடையில் இருந்த ராஜேந்திரபுரம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் கலைமணி மீது பய்ந்தது. காயம் அடைந்த கலைமணி ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக