வியாழன், 6 டிசம்பர், 2012

போலீஸாரைக் கண்டித்து கொத்தமங்கலத்தில் சாலை மறியல்


ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் மாணவிகளுக்கு தொல்லை கொடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வுகளில் அதிகளவுலான மதிப்பெண்களைப் பெறுவதால் கொத்தமங்கலம் தவிர பிற பகுதிகளில் இருந்தும் பள்ளிக்கு சைக்கிளில் வந்து செல்கின்றனர்.  இந்நிலையில் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த சிலர் பள்ளி மாணவிகளை  வழிமறித்து தொல்லை கொடுப்பதாக மாணவிகள்  மற்றும் பெற்றோர் பள்ளி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் விவாதித்து, பிறகு கேலி செய்ததாக 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சித் தலைவர்  தி. பாண்டியன் கீரமங்கலம் காவல் நிலையத்தில் டிச.2-ல் புகார் அளித்தார்.  போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் அத்தகைய செயல் தொடருவதாக மீண்டும் பள்ளிக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸாரைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக