புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் டிச. 2-ம் தேதி நடைபெற்ற ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, கார்த்திக்சிதம்பரம் பேசியது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஊராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுக்கு தலா 3 பேர் இளைஞராக நியமிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இவர்கள்மூலம் கட்சி மற்றும் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்படும். நிர்வாகிகள் பட்டியலில் இடம்பெற்று கூட்டத்துக்கு வரத்தவறியவர்களுக்கு பதிலாக புதியவர்களை சேர்க்க வேண்டும். கட்சியின் செயல்பாடுகளையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் கட்சியினர் அறிந்து பிறரிடம் எடுத்துக்கூற வேண்டும். துணிவுடன் காவல்நிலையம் செல்ல தகுதியுடையோருக்கு மட்டுமே கட்சியில் பொறுப்பு அளிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக