திங்கள், 24 டிசம்பர், 2012

வடகாட்டில் மாநில அளவில் கைப்பந்துபோட்டி அன்புத்தங்கம் அணிக்கு முதல்பரிசு


புதுக்கோட்டை மாவட்டம      வடகாடு அன்புத்தங்கம் கைப்பந்து கழகத்தின் முன்னாள் வீரர் டி.ஏ.எஸ்.டி. தர்மராஜ் நினைவாக இரண்டு நாள் பகல், இரவாக கைப்பந்து போட்டி நடைபெற்றது. சுழற்சி முறையில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம், கேரள மாநிலத்தில் இருந்து 24 அணிகள் கலந்துகொண்டு விளையாடினர். இப்போட்டியில் தகுதிச்சுற்றில் நாக்அவுட் முறையும், பரிசுக்கான தேர்வில் லீக் முறையும் பின்பற்றப்பட்டது. ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்று முதல்பரிசு பெற்ற வடகாடு அன்புத்தங்கம் அணிக்கு  ரூ. 10 ஆயிரத்து ஒன்றும், இரண்டாம் பரிசு பெற்ற திருவாரூர் அணிக்கு ரூ. 8 ஆயிரத்து ஒன்றும், மூன்றாம் பரிசு பெற்ற திருச்சி காவல் துறை அணிக்கு  ரூ. 6 ஆயிரத்து ஒன்றும், நான்காம் பரிசு பெற்ற மேற்பனைக்காடு அலெக்ஸாண்டர் அணிக்கு ரூ. 4 ஆயிரத்து ஒன்றும், ஐந்தாம் பரிசு பெற்ற கேரளா அணிக்கு ரூ. 3 ஆயிரத்து ஒன்றும், ஆறாம் பரிசு பெற்ற வடகாடு அன்புத்தங்கம் சிறுவர் அணிக்கு ரூ. 2 ஆயிரத்து ஒன்றுடன் தர்மராஜ் நினைவுக் போப்பையும் வழங்கப்பட்டது.
     மேலும், மகளிர் பிரிவில் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணி முதல் பரிசையும், முசிறி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாம் பரிசையும், வடகாடு மகளிர் அணி மூன்றாம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்ற இந்த அணிகளுக்கும் ரொக்கத்தொகையுடன் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு சுற்றிலும் தனித் திறமையை வெளிப்படுத்திய வீரருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
 
மாநில அளவில் நடைபெற்ற கைப்பந்துப்போட்டியில் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச்சென்ற கீரமங்கலம் மகளிர் பள்ளி அணிக்கு பரிசு வழங்கியபோது எடுத்தபடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக