புதன், 5 டிசம்பர், 2012

எங்கே போனார்கள் தமிழகத்தின் மத்திய அமைச்சர்கள்?



  தமிழகத்துக்கு இயற்கையும் கைவிரித்துள்ளதால் போதிய அளவு மழை இல்லை. மேலும், மின் உற்பத்தியும் குறைந்துள்ளது. இவைகளின் பற்றாக்குறையால் தமிழக விவசாயிகள், வணிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டு, தற்கொலைக்கு ஆளாகியுள்ளனர்.  தண்ணீருக்காக அண்டை மாநிலத்தை நீதிமன்ற உத்தரவுகளோடும் தமிழகஅரசு அணுகியபோது, தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீ்ரைக்கூட வழங்கமுடியாதென கூறும் அம்மாநில அரசுக்கே அங்குள்ள மத்திய அமைச்சர்களும் துணைநிற்கின்றனர். அதேநிலை மின்சாரத்துக்கும் ஏற்பட்டுள்ளது. ஆகையால், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்குள்ள மக்களை பாதுகாக்க பிறமாநிலங்களிடம் இருந்து தண்ணீரையும், மின்சாரத்தையும் பெற்றுத்தர தாங்கள் தமிழகமக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையிலும், விரைவில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையும் ஏற்பட்டுள்ளதால் பிரதமரிடம் உரிய முறையில் வலியுறுத்த வேண்டுமென்றார் ஆலங்குடி வணிகர் சங்கத் தலைவர் மெ.அ. தனபால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக