கூடங்குளத்தில் அணுகுண்டு தயாரிக்க திட்டம்:
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின்சாரத்தைக் காட்டிலும் அதிலிருந்து வெளியேறும் கழிவுகளைக் கொண்டு அணுகுண்டுகள் தயாரிக்கவே இத்திட்டத்தை நிறைவேற்ற மத்தியஅரசு முனைப்பு காட்டுகிறது என்றார் தமிழர் கழகத் தலைவர் ரா. பாவாணன்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் தமிழ் உணர்வாளர்கள் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாவீரர்தின பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது.
குழந்தைகளுக்கு பொருளறிந்து உலகமொழிகளுக்கெல்லாம் தாயான தமிழில் பெயர் சூட்டவேண்டும்.
தன்நாட்டில் ரஷ்யா மீண்டும் அணுமின் நிலையத்தை அமைக்காமல் இந்தியாவில் அதுவும் தமிழர்நிலத்தில் இத்தகைய திட்டம் அமைக்கவும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கு முழுபொறுப்பேற்க மறுப்பதற்கும் காரணம் ஏற்கனவே அந்த நாட்டில் இத்திட்டத்தால் பலர் பலியானதும், 9 லட்சத்து 85 ஆயிரம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதுமேயாகும்.
அணுக்கழிவுகளால் மட்டுமே குண்டுகள் தயாரிக்கமுடியும் என்பதனாலே இத்திட்டத்தை இங்கு அமைக்க மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது.
கூடங்குளம் அணுமின்நிலையம் அமைக்கப்பட்ட இடத்திலிருந்து மக்கள் 3 கி.மீ. வெளியேற வேண்டுமென்றதும், கடலில் அருகாமையில் இருந்த மீன்களெல்லாம் தற்போது 10 கி.மீ. தள்ளிப்போனதுமே அப்பகுதியினர் கூடங்குளம் திட்டத்தை எதிர்க்க காரணமாயிற்று .இதில் தனிநபரின் தூண்டுதல் ஏதும் கிடையாது.
தமிழன் மின்கழிவால் சாகவேண்டும் அல்லது 10 கி.மீ. சென்று மீன்பிடிக்க செல்லும்போது அங்கு இலங்கை ராணுவத்தினர் பிடித்து கொல்ல வேண்டுமென்பதற்காகவே இத்திட்டத்துக்கு காங்கிரஸ் அரசு முழு ஆதரவு அளிக்கிறது.
ஒரே நாளில் தமிழர்களுக்கு காவிரி நீர் இல்லை என்கிறது கர்நாடகம், மின்சாரம் இல்லை என்கிறது மத்திய அரசு இதற்கு எதிராக காங்கிரஸ் ஏன் கருத்து கூறவில்லை. தமிழகமக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழக்கத் தொடங்கியுள்ளனர். மர்மக்காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் என்பது ஆண்டாண்டு காலமாக தமிழர் கடைபிடித்த மருத்துவமுறை. அதை தற்போது மருத்துவமனைகளில் வழங்குவது அரசின் காலம் தாழ்த்திய நடவடிக்கையாகும்.
இலங்கை அரசுக்கு எதிரான ஐநாவின் தீர்மானத்தை ஆசிய கன்டத்தில் உள்ள நாடுகளெல்லாம் ஆதரித்ததால் இந்தியா ஆதரித்தேதவிர. இது முழுமனதான ஆதரவு இல்லை. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பேசுவது ஆண்டுக்கொரு நாள். அதுவும் கடந்த 2 ஆண்டாக இல்லை. பேசாமல் பேச வைப்பான் பிரபாகரன் என்றார்.
கூட்டத்தில் ராமேஸ்வரம் செரூன்குமார், தமிழ்உணர்வாளர்கள் ரத்தினம், திருச்செல்வம், ரத்தினம், லோகநாதன், தமிழ்க்குமரன், காசிலிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக