வெள்ளி, 7 டிசம்பர், 2012

தஞ்சை, புதுகை மாவட்ட எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்





படவிளக்கம்: புளிச்சங்காடு-கைகாட்டியில் நிறுத்தப்பட்ட பேருந்து, சரக்கு வாகனங்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைகோடி பகுதியாகவும் தஞ்சை மாவட்டத்தின் எல்லையான புளிச்சங்காடு கைகாட்டியில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டது, போலீஸார் குவிக்கப்பட்டனர்.
   புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லையான புளிச்சங்காடு- கைகாட்டி வழியாகவே தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டணம் உள்ளிட்ட டெல்டா  பகுதிகளுக்கு வாகனங்கள் இயக்கப்படுகின்றன.    இந்நிலையில் காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்க மறுக்கும் கந்நாடகா அரசைக் கண்டித்தும், அதைப் பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தியும் விவசாயிகள் டெல்டா மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஆவணத்தில் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லையான புளிச்சங்காடு கைகாட்டியிலும் ஏராளமான விவசாயிகள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதையடுத்து புதுக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த அரசு, தனியார் பேருந்துகள், லாரிகள் புளிச்சங்காடு கைகாட்டியில் நிறுத்தப்பட்டன.  நண்பகலுக்குப்பிறகு அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகள் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டு் திருப்பிச்சென்றன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். ஆலங்குடி காவல் துணைக்கண்காணிப்பாளர் ஏ.சி. செல்லபாண்டியன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுட்டனர்.



                                                                             
     

                                                                             
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக