ஆலங்குடி, நவ. 28: ஆலங்குடியில் மருத்துவமனைக் கழிவுகளை தெருவில் கொட்டுவதை தடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குடியில் அரசமரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலையில் ஸ்டேட் வங்கி எதிரே செல்லும் இணைப்பு சாலையின் சந்திப்பில் தனியார் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட மருந்து பாட்டில்கள், டியூப்கள், ஊசி, கழிவுகளுடன்கூடிய பஞ்சு உள்ளிட்ட கழிவுகளை தினமும் அவ்விடத்தில் கொட்டப்படுகிறது. தாழ்வான பகுதியான அவ்விடத்தில் தண்ணீர் தேங்குவதால் கொசுஅதிகமாக உற்பத்தியாவதுடன், கழிவுகள் அழுகி துரு நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அவ்விடத்தில் கழிவுகளை கொட்டுவது யாரெனக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக