படவிளக்கம்: புளிச்சங்காடு கைகாட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
விவசாயிகள், தொழிலாளர்கள்.
ஆலங்குடி, டிச. 7: தமிழகத்துக்கு காவிரிநீரை வழங்க மறுக்கும் கர்நாடக
அரசைக் கண்டித்தும், அதைப் பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தியும்
விவசாயியிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புளிச்சங்காடு-கைகாட்டி: இங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு
விவசாயிகள் சங் மாவட்ட துணைச் செயலர் எல். வடிவேல், விவசாய தொழிலாளர்
சங்க மாவட்டத் தலைவலர் மா.மணி ஆகியோர் தலைமை வகித்தனர்.
விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் எஸ். ராஜசேகரன், விவசாய
தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் மு.மாதவன், கம்யூனிஸ்ட் கட்சியின்
ஒன்றியச் செயலர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கே. நல்லதம்பி, மார்க்சி்ஸ்ட்
கம்யூனிஸ்ட் கே. சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் ஆலங்குடி நகரச் செயலர்
ஆர். சொர்ணக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.
ரெகுநாதபுரம்:
கறம்பக்குடி அருகேயுள்ள ரெகுநாதபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு
விவசாய சங்க மாவட்டத் தலைவர் சோமையா,மாவட்டச் செயலர் எஸ். பொன்னுச்சாமி
ஆகியோர் தலைமை வகித்தனர்.
நிர்வாகிகள் டி. சத்தியமூர்த்தி, ஆர். கிருஷ்ணன், டி.அன்பழகன்,
வி.மணிவேல், ஆர்.முருகையா, எஸ். நாராயணன், எஸ். சேசுராஜ், உ. அரசப்பன்
ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர்.