வெள்ளி, 22 மார்ச், 2013

பிளாஸ்ட்டிக் சூழலை கெடுக்கும்



  புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கடைவீதியில் சூழலைக்காக்க தான் நடத்தும் தேநீர் கடையில் பிளாஸ்ட்டிக் பையில் தேநீர் கொடுக்கமுடியாதென துண்டறிக்கை மூலம் தெரிவித்துள்ளார் அக்கடையின் உரிமையாளர். அனைவரும் பிளாஸ்ட்டிக் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளலாமே...      

மாடுகளை தெருவுக்கு ஓட்டிவந்து கூவி, கூவி விற்கும் விவசாயிகள்


குறைந்தளவான பருவ மழை, தொடர்மின்தடை,
இவற்றல் நெல், கடலை உள்ளிட்ட பயிர் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் உணவுப்பற்றாக்குறையோடு வைக்கோல் தட்டுப்பாடு, தீவனங்கள் கடும் விலை உயர்வினால் கால்நடை வளர்ப்பும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
   சம்பா சாகுபடியில் அறுவடை செய்யப்பட்டு வயலில் விடப்பட்ட வைக்கோலையும் அதிக விலை கொடுத்து கேரள வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
   இதன்தாக்கம் சந்தைகளில் மாடுகளை குறைந்த விலைக்கு அடிமாடுக்கே விற்பனை செய்ய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
   இதனால், உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து லாரிகளில் ஏற்றிவரப்பட்ட பலவிதான மாடுகளை கிராம பகுதிகளுக்குள் கையில் பிடித்துக் கொண்டு மாடு வேண்டுமா என விவசாயிகள் தாங்கள் வளர்த்த மாடுகளை கூவி, கூவி விற்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
   

வைகோவை மதித்து குடிப்பழக்கத்தை நிறுத்திய விவசாயி


 புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி மல்லிகைபுஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் மு. ரெங்கசாமி (வயது 53). ம.தி.மு.க. வின் மேலவை பிரதிநிதியான இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.
   இவருக்கு திருமணத்துக்கும் முன்பு இருந்தே மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. தற்போது மதுவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வரும் ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வை.கோ-வின் கோரிக்கையை ஏற்ற ரெங்கசாமி கடந்த 4 மாதங்களாக குடி பழக்கத்தை நிறுத்தியுள்ளார். அதற்காக வடகாட்டில் பாராட்டுவிழா நடைபெற்றது.
  பாராட்டுவிழாவுக்கு வடகாடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாத்தையா தலைமை தாங்கினார்.   ஊராட்சிமன்ற உறுப்பினர் அன்பழகன், ஏ.வி. பேரவை நிர்வாகிகள் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   இதுகுறித்து குடியை நிறுத்திய ரெங்கசாமி பேசியது.
நான் ம.தி.மு.க.கட்சியின் பொறுப்பாளராக இருந்தாலும் தொடர்ந்து விவசாயம் தொடர்பான கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் தொகையை தனது செலவுக்காவே பயன்படுத்தினேன்.  30 வயத்தில் தொடங்கிய இந்த குடிப் பழக்கம் 23 ஆண்டுகள் நீடித்தன.
கரூரில் கட்சி சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டுக்கு சென்றபோது அங்கு மதுவுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தப்போவதாக கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்தார். அதேபோல, தெருத் தெருவாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது வேண்டுகோள்படியே மதுகுடிப்பதனால்தான் விபத்து, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களும் அதிகமாக நடக்கின்றன. மதுக்கடைகளை பூட்டுவது அரசின் கொள்கை.  ஆனால், வை.கோ.வின் கொள்கையை ஏற்று நாம் குடிக்காமல் இருந்தால் அரசு தனது கொள்கையை மாற்றிக்கொள்ளும் என்பதால் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து மதுவை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டேன். அதன்பிறகு மருத்துவரிடம் பரிசோதனைக்காக சென்றபோது இதற்கு மேலும் குடித்திருந்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவர் கூறினார். மதுவை நிறுத்தியதால் கடந்த 4 மாதங்களாக மனநிம்மதியாக இருக்கிறேன். என்னிடமும் பணம் இருக்கிறது. திருமணத்துக்கு முன்பிருந்தே குடித்தேன் அதனால் எனது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு எனக்கு ஏற்பட்ட மனஅழுத்தம்தான் நான்போதைக்கே அடிமையாகிவிட்டேன். தற்போது மனஉறுதியுடன் மதுவை கைவிட்டேன். நிம்மதியாக இருக்கிறேன்.  ஆகையால், உரிய உளவியல் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று தன்னம்பிக்கையுடன் இருந்தால் மதுகுடிக்கும் எண்ணமும் வராது, நம்மையும் இச்சமுதாயம் மனிதனாக மதிக்கும் இவ்வாறு பேசினார்.
   பாராட்டுவிழாவில் ஏ.வி. பேரவை நிர்வாகிகள் ராஜேஸ், பிரபாகரன், கோபு, செந்தமிழ்ச்செல்வன், பத்மநாதன், வடிவேல், சுப்பிரமணியன், கப்பல்சிவா மற்றும் பலர் கலந்துகொண்டு ரெங்கசாமியை வாழ்த்திப்பேசினர்.

சனி, 16 மார்ச், 2013

நிறைவேறும் நம்மாள்வார் கோரிக்கை



 சிறுதானியங்களை பாதுகாக்க வேண்டும், இயற்கை விவசாயம் மேற்கொள்ள வேண்டுமென்பது அய்யா இயற்கை விஞ்ஞானி நம்மாள்வாரின் பிரதான கோரிக்கை. இந்த நியாயமான கோரிக்கையை அவர் பல்வேறு வகையில் மக்களிடமும், ஆட்சியாளர்களிடமும் எடுத்துகூறி வருகிறார்.  ஆரம்பத்தில் இதற்கு அரசு செவி சாய்க்கவில்லை. நிலைமையை உணர்ந்த அதிகாரிகள் தற்போது, விவசாயிகள் வைத்திருக்கும் பாரம்பரிய தானியங்களை அந்தந்த பகுதியிலுள்ள வேளாண் ஆராய்ச்சியாளர்களிடம் கொடுத்து காப்புரிமை பெற்றுக்கொள்ளுங்கள் என வேளாண் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இப்பணியை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முன்னெடுத்துள்ளது.
  தமிழ்நாடுக்கு சொந்தமான வேம்பு மரம் அமெரிக்கா காப்புரிமை பெற்றபோதுதான் உணர்ந்துள்ளார்கள் நம்பஆட்கள். இதையாவது முழுசா நிறைவேற்றட்டும். அய்யாவின் கோரிக்கை நிறைவேறட்டும்.


அரசு நிதியை வீணடிக்கும் அதிகாரிகள்


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அற்புதமாதா நடுநிலைப்பள்ளியில் தமிழகமுதமைச்சரின் சிறப்பு பொது மருத்துவமுகாம் 16.03.2013-ல் நடைபெற்றது. ஏழை, எளியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இம்முகாம் குறித்து தகவல் தெரிவித்தால் மட்டுமே உரியவர் வந்து பயனடைவர். மாறாக, ஆலங்குடியில் நடைபெற்ற மருத்துவமுகாமானது அவ்வழியாக சென்றோருக்குத்தான் தெரியும். ஒலிபெருக்கி, துண்டறிக்கை, சுவரொட்டி இவைகள் மூலம் கட்டணம் செலுத்தியோ அல்லது செய்தித்தாள்கள் மூலம் இலவசமாகவோ தெரிவிக்கவில்லை. இதன் விளைவு மக்கள் அங்கு வரவில்லை. மருத்துவ பணியாளர்கள் அங்குமிங்கு குழுமி ஓய்வெடுத்தனர். அரசின் உன்னத திட்டம் இப்படியா வீணடிக்கவேண்டும். கணக்கெழுதியே பழகிய சில சுகாதாரத்துறை அதிகாரிகள்தானே இதற்கு காரணம். இம்முகாம் முடிவுக்கு கொண்டுவரும் என எதிர்பார்ப்போம்.....
வெறிச்சோடிய முகாம் நடைபெற்ற பள்ளி வளாகம்,


 மக்களுக்கு விளக்கம் அளிக்க அமைக்கப்பட்ட அரங்கு



பன்னிரண்டு வயதுப் பாலகனைச் சுட்டஅந்தப் பாவிகளை விட்டு விட்டோம். - சேந்தன்குடி கவிஞர்.க.புத்திரசிகாமணி,


வென்றததைப்… பகைவனை வீழ்த்திய வரலாற்றை,
வீரத்தைத் தொலைத்து விட்டோம்.
வீட்டுக்கொரு டி.வியும் ஆளுக்கொரு செல்லுமாய்
விவேகத்தைப் புதைத்து விட்டோம்.

என்றிதைச் சொன்னாலும் ஏறாது. சேற்றுக்குள்
எறுமைபோல் அமிழ்ந்து விட்டோம்.
எதிரிகளின் கொடுமைகள் இதற்குமேல் பொறுக்காது
எல்லையைக் கடந்து விட்டோம்.

பன்னிரண்டு வயதுப் பாலகனைச் சுட்டஅந்தப்
பாவிகளை விட்டு விட்டோம்.
படங்களைப் பார்த்தே பதறிப்போய் பகைவர்களைப்
பலிவாங்க கிளம்பி விட்டோம்.

ஒன்றரை லட்சம்பேர் உயிரினைக் குடித்துத்… தமிழா்கள்
ஒருமிக்க அழித்த... அந்த
“ஒருத்தனை” உலகத்தில் உலவிட விடமாட்டோம்
உயிரோடு விடவே மாட்டோம்.

…………………………………………………


வெள்ளி, 15 மார்ச், 2013

காங்க. திமுவை நெருக்கடிக்குள்ளாக்கும் அதிமுக எம்எல்ஏ


புதுக்கோட்டைமாவட்டத்தில் ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் குப கிருஷ்ணன் வைத்துள்ள பதாகையானது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்டியை ஏற்படுத்தியுள்ளது.
      ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டுள்ள ஐ.நா. வின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி டெசோ அமைப்பின் சார்பில் திமுக, விடுதலைச்சிறுத்தை கட்சியினர் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை(12.03.2013) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   இந்நிலையில் ஆலங்குடியில் அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் (அதிமுக) குப கிருஷ்ணன், அதிமுக நிர்வாகிகள் டி.எல். ரத்தினம், நெவளிநாதன் ஆகியோர் சார்பில் திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களையின் உறுப்பினர்கள் இலங்கை அதிபருக்கு மரியாதை செலுத்துவது, அவரிடம் இருந்து பரிசு பெறுவது போன்ற படத்துடன்கூடிய பதாகை வைக்கப்பட்டது.
  இப்பதாகை தங்கள் கட்சியை இழிவுபடுத்துவதாக கருதிய திமுகவினர், பதாகையை அகற்ற வேண்டுமென காவல்துறை அலுவலர்கள், ஆலங்குடி வட்டாட்சியர் ஸ்டாலினுக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து அங்கிருந்த பதாகை அகற்றப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அதிமுகவினர் இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், மீண்டும் அதே இடத்தில் அதே பதாகையை வைத்தனர். இதனால் அதிமுக, திமுகவினரிடையே மறைமுகமாக தாக்குதல் ஏற்பட்டது.
   இந்நிலையில் மத்திய அரசை ஆதரித்துவரும் கருணாநிதி தமிழகத்தில் முதலமைச்சராக இருந்தபோது இலங்கையில் லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர், அதற்கு காரணமான அந்நாட்டு அதிபர் வருகையின்போது இந்தியாவில் உற்சாக வரவேற்பு, சென்னைக்கு சிகிச்சைக்காக வந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பியது, டக்ளஸ் தேவானந்தாவை கைதுசெய்யாதது என ஈழத்தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டுவிட்டு தற்போது போராட்டம் நடத்துவது தமிழர்களுக்கு செய்யும் துரோகமாகும். இதையே இந்த பதாகை உணர்த்துகிறது என்றார் குப கிருஷ்ணன்.
   புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வடகாடு, கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வைகோ, பழ.நெடுமாறன், சீமான், பாவாணன், குளத்தூர்மணியன், காசிஆனந்தன், மணியரசன் மற்றும் திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரால் பலமுறை ஈழஆதரவாக பலமுறை பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருப்பது    இப்பகுதியினரின் தமிழ்உணர்வை பறைசாற்றுகிறது.
  மேலும், மத்திய நிதிஅமைச்சரின் தொகுதிக்குள்பட்ட ஆலங்குடி தொகுதியில் தற்போது சட்டப்பேரவை உறுப்பினரே ஈழத்தமிழர் உணர்வாளர்களுக்கு ஆதரவாக பேசிவருவதும், இதுபோன்று பதாகை வைத்திருப்பதும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
     

புதன், 13 மார்ச், 2013

காஷ்மீரோடு ஈழப்பிரச்னையை ஒப்பிடக்கூடாது


 
புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடியில் இங்குள்ள தமிழருக்கும், ஈழபெண்ணுக்கும் புதன்கிழமை நடைபெற்ற திருமணவிழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசியது.
   உயிருக்கு இணையானதாக கருதக்கூடிய தமிழ்மொழி, இனம் உள்ளிட்ட பிரச்னையிலிருந்து மத்திய அரசு நலுவ முயல்வது தவறானது.தேசிய மொழி, இனத்தை காக்கும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது என்பதை அவர்கள் உணரவேண்டும்.
    இன்று இலங்கை சிக்கலுக்கு உதவினால் நாளை காஷ்மீர் சிக்கலுக்கும் அந்நிய நாடுகள் நம்மை நிர்பந்திக்குமென கருதி அதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஈழப்பிரச்னையோடு காஷ்மீர் பிரச்னையை மத்திய அரசு ஒப்பிடகூடாது.
   காஷ்மீரில் குண்டுவீச்சு, பாலியல் தொல்லை, வன்முறை இவைகளெல்லாம் இல்லை, அதேபோல, அங்கிருந்து அகதிகளாக யாரும் வெளியேறவில்லை. மேலும்,அங்குள்ளவர் இந்திய அரசுக்கு உயர்பதிவிக்கெல்லாம் வரலாம். ஆனால், இதற்கு மாறாகவே தமிழ்ஈழத்தில் நிகழ்ந்துள்ளது. தமிழ்ஈழத்தில் உள்ள ஒருவரை அதிபராக, பாதுகாப்பு அதிகாரியாக இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளுமா என்பதை உணரவேண்டும்.
     அதேபோல,  இலங்கைக்கு நாம் உதவாவிட்டால் சீனா உதவும் என்று கூறுவதும் தவறானது. இலங்கை தமிழர்கள் அண்டை நாடுகளில், உரிமையுள்ள நாடான இந்தியாவும், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளால் காப்பாற்றப்படவில்லை. ஆகையால்தான், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் போராட வேண்டியிருந்தது. மேலும் தமிழ்ஈழத்தில் போர் நடக்கும் என்றார் காசிஆனந்தன். இவ்விழாவில் பழ.நெடுமாறன், தமிழ்சேதிய பொதுஉடைமைக் கட்சித் தலைவர் பெ. மணியரசன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
 



ஞாயிறு, 10 மார்ச், 2013

கல்வியில் மாற்றம் காலத்தின் கட்டாயம்




 புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூர் ஆறுமுகம் மெட்ரிக் பள்ளியில் 7.3.2013-ல் நடைபெற்ற ஆண்டுவிழாவில் மாணவர்களைப் பாராட்டி  சமூகஆர்வளர், வழக்குரைஞர் எஸ்.பி. ராஜா. பேசியது.
  கல்விதான் நாட்டை வலிமைப்படுத்துமென கல்விக்காக மத்திய, மாநில அரசுகள் ஏராளமாய் நிதி ஒதுக்குகிறது. அதேசயம், மாணவர்கள் உயிரைமாய்த்துக் கொள்ளுதல், சமூகவிரோத செயலில் ஈடுபடுதல், பாலியல், திராவகம் வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் எல்லாம் கல்வியானது சமூகத்துக்கு பயனளிக்கும் வகையில் இல்லை என்பதை அடையாளப்படுத்துவதாக கருதப்படுகிறது.
   இதையெல்லம் இப்படியே விட்டுவிட்டால் எதிர்காலத்தில் சமூகசீரழிவுகள் இதைவிட அதிகமாகும். இப்போதைய பிரச்னைகளால் பிள்ளைகளை வளர்க்க பெற்றோர்கள் கவலைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், கல்வியை கற்றுக்கொடுத்துவிட்டால் சமூகம் ஒழுக்கமாக இருக்கும் என்பதை நிலைநாட்டும் வகையில் சமூகத்தோடு தொடர்பை ஏற்படுத்தும் வகையில் கல்வியில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்றார்.
 
 
                                                                             
       

வெள்ளி, 8 மார்ச், 2013

மதுவுக்கு எதிரான பிரசாரத்துக்கு பெண்களே பொருத்தமானவர்கள்.



புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் 8.3.2013 அன்று நடைபெற்ற மகளிர் தினவிழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல முதன்மை மேலாளர் பாலச்சந்தர் பேசியது.
   அடுத்தடுத்த தலைமுறைக்கு தீங்கிழைக்கும்  பிளாஸ்ட்டிக் பொருளின் பயன்பாட்டை முழுமையாக தானும் நிறுத்திக் கொண்டு இதை மற்றவர்களிடமும் எடுத்துக்கூற வேண்டும். அதேபோல,  சமூகத்தை சீரழிக்கும் மதுவுக்கு எதிராக பெண்கள் பிரசாரத்தில் ஈடுபடவேண்டும் அதுதான் சரியான தீர்வை ஏற்படுத்தும் என்றார்.

கோடை மழையும்,பயறு சாகுபடியும்

  புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் க. வைரவன்   வெளியிட்ட செய்திக்குறிப்பு:
   இலங்கை அருகே ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.   கோடையில் பெய்யும் இம்மழையை பயன்படுத்தி நெல் அறுவடை செய்யப்பட்ட நிலம் உள்ளிட்ட விளை நிலங்களை நன்கு உழவு செய்ய வேண்டும்.  
    நீர்பாசன வசதி மற்றும் வறட்சியான நிலங்களில் உளுந்தையும், முழுவதும் மானாவாரியாக பயிர் செய்யக் கூடிய நிலங்களில் எள்ளையும் தேர்ந்துதெடுத்து விதைக்கலாம்.
  உளுந்து சாகுபடி:
       உளுந்தைப் பொறுத்தவரையில் மானாவாரி மற்றும் இறவையில் வம்பன் 4, வம்பன் 5, வம்பன் 6 ரகத்தையும், நெல் அறுவடை செய்யப்பட்ட தரிசில் ஏ.டி.டி 3, வம்பன் 4, வம்பன் 5 மற்றும் வம்பன் 6 ரகங்களை விதைக்கலாம். 
    தேவையான உளுந்து விதை:  உழுந்தை தனிப்பயிராக பயிரிட ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதையும் ஊடுபயிராக பயிரிட 4 கிலோ விதையும் மற்றும் நெல் தரிசில் பயிரிட 10 கிலோ விதையும் தேவைப்படும்.
    எள்சாகுபடி: 
           எள் பயிரிடும் விவசாயிகள் மானாவாரி மற்றும் இறவையில் எள் ரகங்களான டி.எம்.வி 3, டி.எம்.வி 4, டி.எம்.வி. 6, கோ 1, வி.ஆர்.ஐ1, எஸ்.வி.பி.ஆர்.1 ரகங்களையும், நெல் தரிசு மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் பயிரிடும் விவசாயிகள் வி. ஆர்.ஐ. 1 ரகத்தினையும் தேர்வு செய்து இப்பருவத்தில் விதைக்கலாம்.
  விவசாயிகள் இந்த மழையைப் பயன்படுத்தி பயறுவகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களைப் பயிரிட்டு நல்ல மகசூல் பெறலாமென்றார். மேலதிக தகவல்களுக்கு நிலையத் தலைவரை 94431 70556 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். 

சனி, 2 மார்ச், 2013

தோழர்களுக்கு முக்கிய அறிவிப்பு:



   மறைந்த புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.முத்துக்குமரன் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி விபத்தில் இறந்தார். அவருக்கு முதலாமாண்டு நினைவுநாளையொட்டி பல்வேறு பணிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆகையால் அதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சட்டத்தால் மீண்டது காவிரி: மீட்கப்படும் கச்சத்தீவு-- கு.ப. கிருஷ்ணன் பேச்சு


புதுக்கோட்டை மாவட்டம்    ஆலங்குடியில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் பிப்ரவரி. 28-ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி  ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப. கிருஷ்ணன்.பேசியது.    காசுகொடுத்தால் கற்பழிப்பு தடுக்கப்படுமா?  பெண்களை  பாலியலுக்குள்ளாக்குவோருக்கு தமிழக முதலமைச்சரின் ஆலோசனைப்படி அதிகபட்ச தண்டனைதான் தீர்வாகுமேதவிர நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிர்பயா நிதி தீர்வாகாது.   யார்தமிழ்உணர்வாளர்:        தமிழகத்தில் மின்தடையை ஏற்படுத்திய திமுக, மத்திய அரசிடம் இருந்து மின்சாரத்தை பெற முயலாமல் இதே நிலை நீடித்தால்தான் தமிழகஅரசை குற்றம்சாட்டியே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாமென்ற கலைஞரின் கனவு பலிக்காது.     தமிழகத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரத்தை பெற்றுத்தராத தமிழகத்தின் மத்தியஅமைச்சர்கள் வீட்டை முற்றுகையிடவேண்டுமென்ற போராட்டத்தை தமிழகமுதல்வர் அறிவித்தால் அதை நாங்கள் நிறைவேற்றத் தயார்.     இலங்கையில் லட்சம் தமிழர்களைக் கொன்றதையும், அதற்கு துணையான இலங்கை அதிபரை இந்தியாவுக்குள் நுழைய தடுக்கவும், மத்திய அரசு இலங்கை அரசுக்கு உதவி செய்வதைத் தடுக்கவும்,  தமிழகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள டக்ளஸ்தேவானந்தாவை கைது செய்ய தவரியவரும், சிகிச்சைக்காக தமிழகம் வந்த பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பியவருமான கலைஞரோ, இப்போது கண்டன அறிவிக்கை விடுவதும், இலங்கை தூதரகத்தை முற்றுகையிடபோவதாகவும் அறிவிக்கிறார். இத்தகைய நாடகமெல்லாம் கலைஞருக்கு எதார்த்தமானது. இதை தமிழர்கள் உணர்வார்கள்.     மக்களவைத் தேர்தலே தமிழர்களுக்கு தீர்வு:

         தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ், திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை படுதோல்வி அடையச் செய்வதே ஈழத்தமிழர்களுக்கு நாம் காட்டும் உண்மையான இரக்கமாகும்.  40 ஆண்டுகளாக போராடிய காவிரி பிரச்னைக்கு உச்சநீதிமன்றத்தின் உதவியால் தீர்வுகண்ட தமிழமுதலமைச்சரால், தமிழர்களின் மற்றொரு பிரதான பிரச்னையாக திகழும் கச்சத்தீவையும் மீட்கமுடியும்.      தமிழகத்தில் தெற்காசிய தடகளப்போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ளக்கூடாது என்ற அறிவித்தார் முதலமைச்சர். அந்த துணிவுகூட மத்தியஅரசுக்கு இல்லாமல் போனதால்தான் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் தலைகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் வெட்டிச்சென்றுள்ளனர்.     எதிரியிடம் சரணடையும் காங்.      முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை இலங்கையிலேயே வைத்து துப்பாக்கியால் அடிக்க முயன்ற சிங்களர்களைவிட தமிழர்களையே எதிரியாக கருதி  இலங்கைக்கு காங்கிரஸ்  அரசு அளிக்கும் உதவியால் இந்தியாவின் வடக்கு, தெற்கு பகுதியில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.ஆளுமைத்திறன் கொண்டவர் ஜெயலலிதா     நாட்டையே அச்சுறுத்தும் சீனரை எதிர்க்க காங்கிரஸ் அரசிடம் ஆளுமை, விலிமை இல்லை. ஆகையால், வலிமையான ஆளுமைத் திறன் கொண்ட தமிழக முதலமைச்சர்தான் இந்திய அரசுக்கு பொருத்தமாவார் என்றார்.