குதிரை சிலைக்கு மாலை அணிவிக்க நீண்டவரிசையில் நிறுத்தப்பட்டிக்கும் வாகனங்கள்.
குளமங்கலம் அய்யனார் கோயில் முன்புள்ள குதிரை சிலைக்கு பழங்களால் கோர்க்கப்பட்ட மாலையை அணிவிக்கும் யானை.
ஆசிய கண்டம் அளவில் புதுக்கோட்டைமாவட்டம் புகழ்பேசும் அளவுக்கு இம்மாவட்டத்தில் சிற்பக்கலை சிறப்பு பெற்றுள்ளது. அதாவது, சித்தன்னவாசல் ஓவியம், சமணர்படுக்கை, அருங்காட்சியகம், கோட்டை, என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரு சிறப்பாக திகழ்வது ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் ஆற்றங்கரையில் அய்யனார் கோயில் முன்புரம் 33 அடி உயரத்தில் தாவிக்குதிக்கும் விதமாக அமைக்கப்பட்ட குதிரை சிலை ஆகும். இச்சிலைக்கு மாசிமகத்தையொட்டி 25.02.2013- அன்று காகிதம், பிளாஸ்ட்டிக், பழங்களால் கோர்க்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாலைகளை வாகனங்கள், மாட்டுவண்டிகள் மூலம் யானை, குதிரைகள் ஊர்வலத்தில் மேலதாளத்துடன் கொண்டுவந்து அணிவித்தனர். இங்கு ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் திரண்டதால் வில்லுனி ஆற்றங்கரையே திணறியது.
nandraga uladhu , sirappu sirappu
பதிலளிநீக்கு