மத்தியஅரசின் திட்டத்தில் வேலை தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்காடு விடங்கேஸ்வரர் சிவன் கோயில் குளத்தை மத்தியஅரசின் நிதியில் சீரமைப்பு பணி தொடங்கியது.
மாங்காட்டில் பிரசித்திபெற்ற விடங்கேஸ்வரர் சிவன்கோவில் முன்பாக உள்ள குளத்தில் மழைகாலத்தில் தேங்கும் நீரையே ஆண்டுமுழுவதும் பயன்படுத்துவர். இந்நிலையில் பல ஆண்டுகளாக இக்குளம் சீரமைக்காததால் குளத்தின் ஆழம் குறைந்துவிட்டது. இதனால் கோடைகாலத்தில் தண்ணீருக்கு மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இதுகுறித்து இப்பகுதி மக்கள், கோவில் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், மத்தியஅமைச்சருமான ப. சிதம்பரம் பரிந்துரையில், இப்கோ உரநிறுவனத்தின் மூலம் குளம் வெட்டும் பணி தொடங்கியது. இப்பணியை காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் புஷ்பராஜ் தொடக்கி வைத்தார். இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக