சனி, 22 ஜூன், 2013

மாங்காடு சிவன்கோவில் கும்பாபிஷேம்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள மாங்காட்டில் பல நூறு ஆண்டுகளைக் கடந்த விடங்கேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கண்காணிப்பில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் ஆடி மாதம் முதல் தை மாதம் வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரான சிவலிங்கத்தின் மீது விழுந்து பிரதிபலிப்பதால் இக்கோவில் சிவபெருமானை சூரியன் பூஜித்த தலமாக விளங்குகிறது.
   மேலும், இக்கோவிலின் சிறப்புகளை ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் காடுகாண் காதை எனும் பகுதியில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரத்துக்கு முன்தோன்றிய இக்கோவிலில் கருவரை, மஹாமண்டபம், அம்மன், காலபைரவர், கணபதி, முருகன், நவகிரகம், துர்க்கை, சண்டிகேஸ்வரர், தெட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பரிவாக சவாமி என கோவிலின் அனைத்து பகுதிகளும் மக்களின் நன்கொடை மூலம் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.
 கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலையில் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்படட தீர்த்தங்களை குடங்களில் நிரப்பி ஜூன் 16-ம் தேதி காலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் பிரபாகர் தலைமையிலான  சிவாச்சாரியார்களால் தொடங்கின.
  தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பூஜைகள் செய்யப்பட்டது.  5- ஆம் கால பூஜை முடிவுற்றதும் செண்டை மேளஇசையில் யானை, குதிரைகள் முன்னே செல்ல, புனிதநீர்க்குடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கோவிலை சுற்றிவந்து கோபுரங்களை அடைந்தனர். பின்னர், தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை சொல்லிக்கொண்டே இருந்தனர். அப்போது, பல்வேறு திசைகளில் இருந்து கருடன்கள் வந்து வானில் வட்டமிட்டன. இதையடுத்து பக்தர்களின் கரஒலியுடன் கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டதுடன், தீர்த்தும் தெளிக்கப்பட்டது.
கூட்டத்தை ஒழுங்குபடுத்திய மாணவர்கள்:
 எல்.என்.புரம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கோவில் அருகே 3 இடங்களில் அன்னதானம் அளிக்கப்பட்டது. வடகாடு காவல் நிலைய போலீசார் மற்றும் ஆலங்குடி தீயணைப்பு பிரிவு போலீசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். பல்வறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர்,   பொதுமக்கள் செய்தனர். பாட்டுக்கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கிராம மக்கள் சார்பில் அனைவரையும் வரவேற்றனர்.


வெள்ளி, 21 ஜூன், 2013

சொன்னதுக்கு என்ன மரியாதை: ஆலங்குடி எம்எல்ஏ ஆவேசம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வாண்டாகோட்டை அருகே பால் வண்டியும், தனியார்பேருந்தும்( பிஎல்.ஏ) ஜூன் 19-ம் தேதி  மோதிக்கொண்டதில் கைக்குறிச்சி ஊராட்சி விஜயரகுநாதபுரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் படித்த 7 மாணவர்கள், பால் வண்டி ஓட்டுநர் உள்பட 8 பேர் சம்வஇடத்திலேயே பலியாயினர். இவர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நபருக்கு தலா ரூ. 1 லட்சத்தை ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கு.ப. கிருஷ்ணன், ஆட்சியர் செ. மனோகரன் உள்ளிட்டோர் ஜூன் 20 -ம் தேதி வழங்கினர்.
 அதன்பிறகு ஆட்சியரகத்தில் மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் விபத்தில்லாமல் பேருந்தை இயக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், அதிக பட்சம் 60 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும், அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லவேண்டுமென்ற அரசாணையை பின்பற்ற வேண்டும். இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
      கூட்டத்தை முடித்துவிட்டு ஆலங்குடி சட்டப்பேரவை  உறுப்பனர் கு.ப. கிருஷ்ணன் காரில் திருச்சிக்கு சென்றுகொண்டிருந்தார். மாத்தூர் அருகே சென்றபோது எதிரே திருச்சியிலிருந்து காரைக்குடி நோக்கி அதிவிரைவாக வந்த தனியார் பேருந்து (என். எல்.எல்) எம்.எல்.ஏ. வின் காரை இடித்து தள்ளுவதுபோல மின்னல்வேகத்தில் காரை நோக்கி வந்துள்ளது. சுதாரித்துக்கொண்ட காரின் ஓட்டுநர் கணம் நேரத்தில் சாலையை விட்டு காரை இறக்கினார். இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை.
     இதைத்தொடர்ந்து அங்கிருந்தபடியே மாவட்ட ஆட்சியரை செல்போனில் தொடர்புகொண்ட எம்எல்ஏ கு. ப. கிருஷ்ணன், அரசின் விதிமுறைகளை மீறி, நாம் கூட்டத்தின் வாயிலாக சொல்லியும் மதிக்காத தனியார் பேருந்து (என்என்எல்) மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதன்படி புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலரால் அந்த பேருந்து பறிமுதல் செய்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, ஓட்டிநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.    

செவ்வாய், 4 ஜூன், 2013

வடகாடு பகுதியில் மரங்கள் வளர்த்தும் மழை இல்லை: விவசாயிகள் அதிர்ச்சி :இயற்கை மாறுபாட்டை ஆய்வு செய்ய கோரிக்கை

  புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, கொத்தமங்கலம், அணவயல் உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு மூலம் விவசாயம் செய்யப்படுவதால் பல ஆண்டுகளாக மரங்கள் வளர்க்கப்படுகிறது. இதன்தாக்கம் இப்பகுதியில் மா, தென்னை, பலா மரங்கள் தோப்புகளாக பராமரிக்கப்படுகின்றன. இப்பகுதியில் பலா மரங்கள் அதிகமாக இருப்பதன் விளைவே தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், வேம்பு, தேக்கு, பூவரசு, ரோஸ்வுட் உள்ளிட்ட மரங்களும் வளர்க்கப்படுகின்றன. நூற்றுக்கணக்கான ஏக்கரில் மரம் வளர்க்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு வருடமும் மழை அதிகமாகவே பெய்துள்ளது. மரம் அதிகரிப்பதால் மரச்சந்தையும், மரம் வியாபாரிகளும் அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் அனேக இடங்களில் கோடை மழை பெய்தது. இந்த மழை ஈரத்தை பயன்படுத்தி அடுத்த சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகின்றனர். ஆனால், மரம் நட்டால் மழை பெய்யும் என்பார்கள், இந்தப் பகுதியில் வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கப்படுகிறது. மேலும், மரங்களை வளர்த்து வனங்களாக மாற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்பகுதிக்கு மழைபெய்யாமல் மரம் குறைவாக உள்ள பகுதிக்கும், மரங்கள் இல்லாமல் கட்டிடங்கள் மட்டுமே அதிகமாக உள்ள நகர் பகுதிக்கும் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த நிலை நீடித்தால் குடிக்கூட தண்ணீருக்கே பஞ்சம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
 இது குறித்து விவசாயி மாங்காடு வினோத் கூறியது.
 மரங்கள் அதிகமாக வளர்க்கப்படுவதால் கோடையின் தாக்கம் மற்ற பகுதிகளைவிட குறைவாகவே இருக்கும். அதற்கு சான்றாகவே மலை பிரதேசங்களில் பயிரிடப்படும் மிளகு இங்குள்ள தோப்புகளில் உள்ள மரறங்களில் கொடியாக ஏற்றி வளர்க்கப்படுகிறது. குளிர் பிரதேசங்களைப்போலே இங்கு மிளகு நல்ல விளைச்சலை ஈட்டுகிறது. அப்படி இருக்க கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் குறைந்துவிட்டது. அதேபோல, இந்த ஆண்டு கோடைமழை முற்றாக இல்லாதிருப்பது எதிர்காலத்தில் குடிநீர் கிடைக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகையால்,  பருவநிலை மாற்றம் ஏற்பட்டிருக்கலாமென அச்சம் ஏற்பட்டுள்ளதால் இது குறித்து அரசு விஞ்ஞானிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.  இயற்கை இடற்பாடுகளில் இருந்து போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுவே இப்பகுயினரின் கோரிக்கையாக உள்ளது.

வடகாடு பகுதியில் மரங்கள் வளர்த்தும் மழை இல்லை விவசாயிகள் அதிர்ச்சி இயற்கை மாறுபாட்டை ஆய்வு செய்ய கோரிக்கை

  புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, கொத்தமங்கலம், அணவயல் உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு மூலம் விவசாயம் செய்யப்படுவதால் பல ஆண்டுகளாக மரங்கள் வளர்க்கப்படுகிறது. இதன்தாக்கம் இப்பகுதியில் மா, தென்னை, பலா மரங்கள் தோப்புகளாக பராமரிக்கப்படுகின்றன. இப்பகுதியில் பலா மரங்கள் அதிகமாக இருப்பதன் விளைவே தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், வேம்பு, தேக்கு, பூவரசு, ரோஸ்வுட் உள்ளிட்ட மரங்களும் வளர்க்கப்படுகின்றன. நூற்றுக்கணக்கான ஏக்கரில் மரம் வளர்க்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு வருடமும் மழை அதிகமாகவே பெய்துள்ளது. மரம் அதிகரிப்பதால் மரச்சந்தையும், மரம் வியாபாரிகளும் அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் அனேக இடங்களில் கோடை மழை பெய்தது. இந்த மழை ஈரத்தை பயன்படுத்தி அடுத்த சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகின்றனர். ஆனால், மரம் நட்டால் மழை பெய்யும் என்பார்கள், இந்தப் பகுதியில் வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கப்படுகிறது. மேலும், மரங்களை வளர்த்து வனங்களாக மாற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்பகுதிக்கு மழைபெய்யாமல் மரம் குறைவாக உள்ள பகுதிக்கும், மரங்கள் இல்லாமல் கட்டிடங்கள் மட்டுமே அதிகமாக உள்ள நகர் பகுதிக்கும் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த நிலை நீடித்தால் குடிக்கூட தண்ணீருக்கே பஞ்சம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
 இது குறித்து விவசாயி மாங்காடு வினோத் கூறியது.
 மரங்கள் அதிகமாக வளர்க்கப்படுவதால் கோடையின் தாக்கம் மற்ற பகுதிகளைவிட குறைவாகவே இருக்கும். அதற்கு சான்றாகவே மலை பிரதேசங்களில் பயிரிடப்படும் மிளகு இங்குள்ள தோப்புகளில் உள்ள மரறங்களில் கொடியாக ஏற்றி வளர்க்கப்படுகிறது. குளிர் பிரதேசங்களைப்போலே இங்கு மிளகு நல்ல விளைச்சலை ஈட்டுகிறது. அப்படி இருக்க கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் குறைந்துவிட்டது. அதேபோல, இந்த ஆண்டு கோடைமழை முற்றாக இல்லாதிருப்பது எதிர்காலத்தில் குடிநீர் கிடைக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகையால்,  பருவநிலை மாற்றம் ஏற்பட்டிருக்கலாமென அச்சம் ஏற்பட்டுள்ளதால் இது குறித்து அரசு விஞ்ஞானிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.  இயற்கை இடற்பாடுகளில் இருந்து போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுவே இப்பகுயினரின் கோரிக்கையாக உள்ளது.