(படம் உள்ளது)
சட்டம் ஒழுங்கை காப்பதில் பொதுமக்களுக்கும் பங்குண்டு
ஆலங்குடி, டிச. 1:
சட்டம் ஒழுங்கை காப்பதில் போலீஸாருடன் பொதுமக்களுக்கும் பங்கு உண்டு என்றார் காவல் துணைக்கண்காணிப்பாளர் எ.சி. செல்லபாண்டியன்.
ஆலங்குடியில் போலீஸ் மற்றும் பொதுமக்களை இணைத்து கிராம விழிப்புணர்வுக் கமிட்டி அமைப்பது குறித்து புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பேசியது.
பெரிய கிராமத்தில் 30 பேரும், சிறிய கிராமத்தில் 20 பேரையும் உள்ளடக்கி இக்கமிட்டி அமைக்கப்படும். அதில் நாளொன்று 3 பேர் வீதம் அந்த கிராமத்தை ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிக்க வேண்டும். தேவையென்றால் போலீஸ் அனுப்பி வைக்கப்படும். பொறுப்பாளர்கள் கிராமத்தில் அரசியல், ஜாதி வேறுபாடின்றி முழு ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும். சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்தால் உடன் அந்தந்த காவல் நிலைத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். தற்காப்புக்காக கமிட்டி பொறுப்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டார்ச் லைட் மற்றும் லத்தியை தற்காப்புக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். முக்கியத் தகவல்களுக்கு 94434 70572 எனது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் சமரசம் முன்னிலை வகி்தார்.
காவல் உதவி ஆய்வாளர்கள் கவிதா, கலியபெருமாள், வீராச்சாமி உள்ளிட்டோர் பேசினர்.
நிகழ்ச்சியை கீரமங்கலம காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், செ.விடுதி, கறம்பக்குடி, ரெகுநாதபுரம் ஆகிய காவல் நிலையத்துக்குள்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வளர்கள் பங்கேற்றனர்.
(படவிளக்கம்)
ஆலங்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார் காவல் துணைக் கண்காணிப்பாளர் எ.சி. செல்லபாண்டியன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக