புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இங்குள்ள தமிழருக்கும், ஈழபெண்ணுக்கும் புதன்கிழமை நடைபெற்ற திருமணவிழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசியது.
உயிருக்கு இணையானதாக கருதக்கூடிய தமிழ்மொழி, இனம் உள்ளிட்ட பிரச்னையிலிருந்து மத்திய அரசு நலுவ முயல்வது தவறானது.தேசிய மொழி, இனத்தை காக்கும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது என்பதை அவர்கள் உணரவேண்டும்.
இன்று இலங்கை சிக்கலுக்கு உதவினால் நாளை காஷ்மீர் சிக்கலுக்கும் அந்நிய நாடுகள் நம்மை நிர்பந்திக்குமென கருதி அதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஈழப்பிரச்னையோடு காஷ்மீர் பிரச்னையை மத்திய அரசு ஒப்பிடகூடாது.
காஷ்மீரில் குண்டுவீச்சு, பாலியல் தொல்லை, வன்முறை இவைகளெல்லாம் இல்லை, அதேபோல, அங்கிருந்து அகதிகளாக யாரும் வெளியேறவில்லை. மேலும்,அங்குள்ளவர் இந்திய அரசுக்கு உயர்பதிவிக்கெல்லாம் வரலாம். ஆனால், இதற்கு மாறாகவே தமிழ்ஈழத்தில் நிகழ்ந்துள்ளது. தமிழ்ஈழத்தில் உள்ள ஒருவரை அதிபராக, பாதுகாப்பு அதிகாரியாக இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளுமா என்பதை உணரவேண்டும்.
அதேபோல, இலங்கைக்கு நாம் உதவாவிட்டால் சீனா உதவும் என்று கூறுவதும் தவறானது. இலங்கை தமிழர்கள் அண்டை நாடுகளில், உரிமையுள்ள நாடான இந்தியாவும், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளால் காப்பாற்றப்படவில்லை. ஆகையால்தான், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் போராட வேண்டியிருந்தது. மேலும் தமிழ்ஈழத்தில் போர் நடக்கும் என்றார் காசிஆனந்தன். இவ்விழாவில் பழ.நெடுமாறன், தமிழ்சேதிய பொதுஉடைமைக் கட்சித் தலைவர் பெ. மணியரசன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக