சனி, 28 செப்டம்பர், 2019

விதை என்பது தேசத்தின் உயிர்- நிலமும் வளமும்- 28.9.2019


the-survival-of-the-nation
கே.சுரேஷ்
உழவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஒருங்கிணைத்து, பாரம்பரிய நெல், சிறுதானியம் ஆகியவற்றின் விதைகளைச் சிறுக சிறுகச் சேகரித்து அவற்றைச் சாகுபடி செய்வதோடு, தமிழகமெங்கும் பாரம்பரிய விதைகளைப் பரவலாக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது புதுக்கோட்டை 'இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனம்'.
சாகுபடியோடு நின்றுவிடாத இந்த நிறுவனம், அரிசி, மாவு, பலகாரங்கள் ஆகியவற்றையும் மதிப்புக்கூட்டி வெளிநாடு வரை வணிகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் புதுக்கோட்டை அருகே வடமலாப்பூரில் உள்ளது. கடந்த 6-ம் தேதி இந்த நிறுவனத்தில் பாரம்பரிய விதைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
மாப்பிள்ளைச்சம்பா, பூங்கார், கவுனி, மிளகி, இலுப்பைப்பூச் சம்பா, கிச்சிலிச்சம்பா, தூயமல்லி, குழியடிச்சான், அறுபதாம் குறுவை, கறுங்குறுவை, காட்டுயானம், குள்ளக்கார், காலான் நமக், வாளன்சம்பா, துளசிவாசனை சீரகச்சம்பா, தேங்காய்ப்பூச் சம்பா, ராஜபோகம், நவரா உள்ளிட்ட 40 வகையான பாரம்பரிய நெல் ரகங்களும், கேழ்வரகு, குதிரைவாலி, சாமை, திணை, வரகு, கம்பு போன்ற சிறுதானிய விதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும், பாரம்பரிய ரகங்களைச் சாகுபடி செய்யும் முறை, இயற்கை முறையில் பூச்சி விரட்டி, பயிர் ஊக்கி மருந்துகள் தயாரிக்கும் முறை ஆகியவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட பலகாரங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த விதைத் திருவிழாவை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தார். இதில், பல்வேறு துறை அலுவலர்கள், இயற்கை உழவர்களும் கலந்துகொண்டு பேசினர்.
“நிறுவனத்தைத் தொடங்குவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இயற்கை வேளாண் முறையை முன்னெடுத்துச் செய்து வருகிறோம். இதற்குக் குறைந்த தண்ணீரே போதுமானது என்பதோடு, கால்நடைகளுக்கும் தேவையான அளவுக்கு வைக்கோலும் கிடைக்கிறது. விஷத்தன்மை இல்லாத உணவுப் பொருள் கிடைப்பதால் மீண்டும் பாரம்பரிய வேளாண்மைக்கு உழவர்கள் மாறி வருகின்றனர்” என்கிறார் இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆதப்பன்.


தமிழகத்தில் கடந்த காலத்தில் வறட்சி, வெள்ளத்தில் நெல் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்ட போது பாரம்பரிய பயிர்கள் கைகொடுத்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். இயற்கை வேளான்மையை ஊக்கப்படுத்துவதற்காக விதைகளையும் விலைக்குக் கொடுக்கின்றனர். ஒரு கிலோ விதை கொடுத்தால் அறுவடை முடிந்து 2 கிலோ திருப்பிக் கொடுக்க வேண்டுமென்ற பரிமாற்ற முறையிலும் இந்நிறுவனத்தின் உழவர்களுக்கு விதைகளை அளிக்கின்றனர். உழவர்கள் சாகுபடிசெய்யும் நெல், தானியங்கள் ஆகியவற்றை உரிய விலைக்கு இவர்களே கொள்முதலும் செய்கிறார்கள்.
“யாருடைய வீடுகளில் விதை இருக்கிறது?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார் ‘தமிழ்க் காடு’ அமைப்பின் நிர்வாகி ரமேஷ் கருப்பையா. உழவர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட அந்த அரங்கில் சிலர்தான் கையை உயர்த்தித் “தங்கள் வீட்டில் விதை இருக்கிறது” என்றனர். தொடர்ந்து பேசிய கருப்பையா, “விதைதான் ஆயுதம். விதைதான் தேசத்தின் உயிர். இதை நம்பி நாட்டில் பலகோடி வயிறு உள்ளது. விதைகளைப் பாதுகாத்தவர்கள்தான் இந்தத் தேசத்தின் பாதுகாவலர்களாக இருக்க முடியும். விதையைக் கோயில் கோபுரக் கலசத்துக்குள் வைத்து முன்னோர்கள் பாதுகாத்தார்கள்.

அந்த அளவுக்கு நம் பாரம்பரிய சொத்து அழிந்துபோய்விடக் கூடாதெனக் கருதினார்கள். விதைகளைப் பாதுகாப்பதன் அவசியத்துக்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும், ஆனால், நாம் விதைகளைப் பாதுகாப்பதில்லை. அவை எப்போது நம் வீட்டை விட்டு வெளியேறியதோ, அன்றைக்கே ஆரோக்கியமான விவசாயமும் வெளியேறிவிட்டது” என விதையின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார்.
மேலும் பேசிய அவர், “மழை நீரைக்கொண்டு உழவு செய்வதுதான் வெற்றிகரமானது. ஆனால், ஆயிரம் அடிக்கும் கீழே இருக்கும் தண்ணீரை வெளியே கொண்டு வந்து செய்யும் உழவு, தோல்வியானது. தண்ணீரைச் சேமித்து உழவுசெய்வதற்குக் கிணறுதான் அவசியம். அதைவிட ஆழ்துளைக் கிணறு உள்ளிட்ட பல்வேறு முறைகளில் தண்ணீரை எடுத்து உழவு செய்வதென்பது ஒருவரின் உடலில் இருந்து அளவுக்கு அதிகமான ரத்தத்தை எடுப்பதற்குச் சமம்” என்றார்.
(புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவன மேலாண்மை இயக்குநரைத் தொடர்புகொள்ள:
98420 93143.)

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

தமிழகத்தில் பரிசோதனை செய்யப்பட்ட 26 லட்சம் பேரில் 2.30 லட்சம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம்


பட்டத்திக்காட்டில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? sep 21. R


மேல்மங்களத்தில் குடிநீருக்காக குளத்தில் குழி தோண்டும் மக்கள். செப்.15. R

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேல்மங்களத்தில் தண்ணீர் தேங்கியுள்ள குளத்தில் குழி தோண்டி, ஊறும் தண்ணீரை மக்கள் காத்திருத்து பிடித்துச் செல்கின்றனர்.
அறந்தாங்கியில் இருந்து நாகுடி செல்லும் சாலையில் உள்ள மேல்மங்களம் கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து விநியோகிக்கப்படும் குடிநீரில் உப்புத் தன்மை அதிகமாக இருப்பதால் மக்கள் அதை பயன்படுத்துவதில்லை.
இதையடுத்து, அங்குள்ள குளத்தில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் சுமார் 2 அடி ஆழத்துக்கு குழிகளைத் தோண்டி அவற்றில் ஊறும் தண்ணீரை பிடித்துச் சென்று குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். மழை, வெயில் காலங்களில் மிகுந்த சிரமத்துக்கு இடையே தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது.
எனவே, வேறு பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வந்து இக்கிராமத்துக்கு விநியோகிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறியதாவது:
குழாய் தண்ணீர் உப்பாக இருப்பதால் அதை குடிநீராக பயன்படுத்துவதில்லை. லாரிகளில் கொண்டுவரப்படும் தண்ணீரை குடம் ரூ.10-க்கு வாங்கி பயன்படுத்துவோம். அதுக்கும் வசதி இல்லாதோர் குளத்தில் ஊற்று தண்ணீரை எடுத்து குடிநீராக பயன்படுத்தி வருகிறோம்.
ஒரு குடம் நிரம்ப சுமார் 2 மணி நேரமாகும். குளத்தில் தண்ணீர் சூழ்ந்திருந்தாலும் மேடான பகுதியில் குழிகளை தோண்டி ஊற்றுத் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகிறோம். மழை காலமாக இருந்தாலும் வெயில் காலமாக இருந்தாலும் இதுதான் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது.
குடிநீர் கஷ்டத்தை போக்குவதற்கு வேறு ஊரில் ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து குடிநீர் கொண்டு வந்து மேல்மங்களம் கிராமத்துக்கு விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

சனி, 14 செப்டம்பர், 2019

புதுக்கோட்டை மாவட்ட கடைமடைக்கு வராத காவிரி நீர் 14.9.2019 ( cal.all)


வெள்ளப் பெருக்கெடுத்து கடலில் கலக்கும் சமயத்தில்கூட
புதுக்கோட்டை மாவட்ட கடைமடைக்கு வராத காவிரி நீர்
550 கனஅடி நீரை வழங்க அலுவலர்கள் மறுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
கே.சுரேஷ்
                                                         விவசாயி கண்ணன்


புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி பகுதியில் விதைக்கப்பட்ட நிலையில் தண்ணீருக்காக காத்திருக்கும் நெற்பயிர்கள்.படங்கள்: கே.சுரேஷ்


புதுக்கோட்டை
பெருக்கெடுத்து வரும் காவிரி நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே கடலுக்கு திறந்துவிடப்பட்டு வரும் நிலையிலும்கூட, புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடைக்கு 550 கனஅடி தண்ணீரை தினந்தோறும் வழங்க அலுவலர்கள் மறுப்ப தாக விவசாயிகள் குற்றம் சாட்டு கின்றனர்.கல்லணையில் இருந்து கல்ல ணைக் கால்வாய் மூலம் புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் காவிரி நீரைக்கொண்டு சாகுபடி செய்யப்படுகிறது.வழக்கமாக மேற்பனைக்காடு கதவணைக்கு 550கனஅடியும், நாகுடி கதவணைக்கு 300 கனஅடி தண்ணீரும் வரும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கல்லணைக் கால்வாயின் பிரதான வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாலும், கரைகள் பலமிழந்து உள்ளதாலும் இந்தக் கால்வாயில் அதிகபட்ச மாக 4,500 கனஅடி தண்ணீரைத் திறக்காமல் சுமார் 2,500 கனஅடியே திறக்கப்படுகிறது.இதனால், டெல்டாவின் கடைமடையான புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வாரத்துக்கு ஒரு முறை வீதம் குறிப்பிட்ட தடவை தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சாகுபடிக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் இருப்பதால் சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்ட வில்லை.இதேநிலை தொடர்வதால் கால் வாயின் கரைகளை பலப்படுத்தி முழு கொள்ளளவுக்கு தண்ணீரை திறக்க வேண்டுமென வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.அதன்பிறகு, கடந்த சில நாட் களாக கொள்ளிடம் ஆற்றில் திறக் கப்படும் 13,000 கனஅடி முதல் 17,000 கனஅடி வரை தண்ணீர் கடலுக்குச் செல்கிறது.இவ்வாறு காவிரியில் பெருக் கெடுக்கும்போதெல்லாம் கடலுக்கு திருப்பி விடுவதிலேயே அக்கறை காட்டும் அரசு, கடைமடைப் பகுதிக்கு திருப்பிவிட மறுப்பது வேதனை அளிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள கண்டை யன்கோட்டை விவசாயி கண்ணன் கூறியது:
தொடர் போராட்டம்புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 550 கனஅடி தண்ணீரை திறந்து விடக் கோரி கடந்த ஆண்டு கடை மடை விவசாயிகள் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு தமிழக முதல்வரைச் சந்தித்து வலியுறுத்தி ஓராண்டாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை.தற்போது கொள்ளிடம் ஆறு வழியாக குறைந்தது 13,000 கனஅடி முதல் அதிகபட்சம் 17,000 கனஅடி வரை தண்ணீர் கடலுக்குச் செல்கிறது. ஆனால், நாங்கள் கேட்பது வெறும் 550 கனஅடி தண்ணீர்தான். அதைக்கொடுக்க ஏன் மறுக்க வேண்டும்.
கரைகளை பலப்படுத்தி...
பூதலூரில் இருந்து தஞ்சாவூர் வரை கல்லணைக் கால்வாயின் கரைகளை பலப்படுத்தி 4,500 கனஅடி தண்ணீரை திறக்க வேண்டுமென வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது. செப்.16-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.கோரிக்கை குறித்து வலியுறுத் தும்போதெல்லாம் அரசு நிதி ஒதுக்கி கிளை வாய்க்கால்களை தூர்வார ஒப்பந்தம் விடுகிறது. அந்த நிதி யிலும் ஆளும் கட்சியினரால் முறை கேடு செய்யப்படுகிறது என்றார்.
கால்வாயை பலப்படுத்த கருத்துரு
இதுகுறித்து கல்லணைக் கால் வாய் பாசன பிரிவு பொறியாளர்கள் வட்டாரத்தில் கூறியதாவது:
கல்லணையில் இருந்து கல்ல ணைக் கால்வாயில் முழு கொள்ள ளவில் தண்ணீர் திறந்தால்தான் புதுக்கோட்டை மாவட்ட கடை மடைக்கு உரிய அளவுப்படி தினமும் தண்ணீர் கொடுக்க முடியும். முழு கொள்ளளவு திறப்பதாக இருந்தால் கால்வாய் பலப்படுத்த வேண்டும். விவசாயிகளின் கோரிக் கையை ஏற்று கால்வாயைப் பலப் படுத்த கல்லணைக் கால்வா யின் வாய்க்கால்கள் நீட்டித்தல், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்து தல் (இஆர்எம்) திட்டத்தில் நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தற்போது சுழற்சி முறையில் அனைத்து வாய்க்கால்களிலும் தண்ணீர் கொண்டு செல்லப்படு கிறது. வாய்க்கால்கள் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்படும் இடங்களில் தாமதம் ஏற்படுகிறது என்றனர்.