புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாசலத்தின் 2 -ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு அக். 7-ம் தேதி ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ஆலங்குடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்த வெங்கடாசலம் 7.10.2010 படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடகாடு, பேப்பர்மில்ரோடு முக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மக்கள் பிரதிநிகள், அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர், பல்வேறு கிராம மக்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். முன்னதாக வடகாடு கடைவீதியில் இருந்து அமைதியாக ஊர்வலம் வந்து நினைவிடத்தில் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.