ஞாயிறு, 7 அக்டோபர், 2012

வடகாட்டில் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்துக்கு குருபூஜை



  


 புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாசலத்தின் 2 -ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு அக். 7-ம் தேதி ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
 ஆலங்குடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்த வெங்கடாசலம் 7.10.2010 படுகொலை செய்யப்பட்டார். 
 இந்நிலையில் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடகாடு, பேப்பர்மில்ரோடு முக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. 
     இதில் மக்கள் பிரதிநிகள், அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர், பல்வேறு கிராம மக்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். முன்னதாக வடகாடு கடைவீதியில் இருந்து அமைதியாக ஊர்வலம் வந்து நினைவிடத்தில் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.  
                                                                               
        

                                                                               
        

சனி, 6 அக்டோபர், 2012

வடகாடு மாரியம்மன் கோவில் விரைவில் திருப்பணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற வடகாடு அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் விரைவில் திருப்பணி தொடங்கவுள்ளது


புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் தேரில் பவனி வரும் அம்மன்.

பத்திரிகையாளருக்கு பாராட்டு..


ஓடாத ஓட்டை வண்டி-க்கு





ஓடாத ஓட்டை வண்டி-க்கு 
வடகாடு வழியாக பட்டுக்கோட்டை-புதுக்கோட்டை இடையே செல்லும் இந்தப் அரசுப் பேருந்தானது ஆலங்குடியில் பழுதாகி பயணிகளை வெளியேற்றியது. இதேபோல் இவ்வழித்தடத்தில் சரியான தரமான பேருந்துகளை இயக்காததால் பழுதாகி நடுவழியிலேயே நிற்பதம், பயணிகள் நடப்பதும் வாடிக்கைதான்